Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை பொது மக்களின் நலன் கருதி சமூக நல அமைப்புகளுடன் இணந்து keeggi நிறுவனம் கபசுப குடிநீர் சூரணம் வழங்கல்…

கீழக்கரை பொது மக்களின் நலன் கருதி சமூக நல அமைப்புகளுடன் இணந்து keeggi நிறுவனம் கபசுப குடிநீர் சூரணம் வழங்கல்…

by ஆசிரியர்

கீழக்கரை பொது மக்களின் நலன் கருதி சமூக நல அமைப்புகளுடன் இணந்து keeggi நிறுவனம் கபசுப குடிநீர் சூரணம் வழங்கல்.

தற்போது கொரோனா என்ற கொடிய காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது.தற்போது நிலவும் இந்த சூழ்நிலையில் கீழக்கரையின் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி மக்கள் நல பாதுகாப்புக்கழகம் சட்ட விழிப்புணர்வு இயக்கம், keeggi செயலி, கீழை நியூஸ்,சத்திய பாதை தமிழ் மாத இதழ், இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல்-ஹைராத்திய தர்ம அறக்கட்டளை மற்றும் ஜமாலியா அறக்கட்டளை சார்பாக கபசுர குடிநீர் சூரணம் தேவையுடைய கீழக்கரை நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பொது மக்களுக்கு வழங்கும் முகாம் இன்று (12/06/2020) இஸ்லாமிய கல்வி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த தொடக்க முகாமில் மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் தலைவர் தமீமுதீன் தொடங்கி வைக்க சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மூத்த நிர்வாகி தாஜூல் அமீன் தன் பகுதி மக்களுக்கான சூரணத்தை பெற்று கொண்டார். இந்த முகாமில் இஸ்லாமிய கல்வி சங்க தலைவர் ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, துணைத்தலைவர் ஃபாசில் அக்ரம்,பொருளாளர் சல்மான் கான், மஜ்ம-உல்-ஹைராத்திய தர்ம அறக்கட்டளை நிறுவனர் முஹம்மது ஜமீல், ஜமாலியா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முஹம்மது இஸ்மாயில், சமூக ஆர்வலர் அப்துல் காதர், மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேவையுடைய பொதுமக்கள் எத்தனை நபருக்கு தேவை என்ற விபரத்தோடு கீழ்கண்ட அலைபேசியில் தொடர்ப்பு கொள்ளலாம். 9443358305, 9677640305, 9791742074, 9791741708, 7550351941, 9944172759.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!