இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு கால கட்டத்தில், தொழில் முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதித்த தங்களுக்கு மீண்டும் உதவ வேண்டுமென திமுக., நகர் செயலர் ராஜாவிடம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.
இதன்படி, திமுக., தலைவர் மறைந்த கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை நகர் செயலர் டி. ராஜா, தனது சொந்த செலவில் வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா (முன்னாள் கவுன்சிலர்), மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என். பூவேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்), மொழிப்போர் தியாகி காந்தகுமார், நகர் துணை செயலர் எஸ்.பகுர்தீன் (முன்னாள் கவுன்சிலர்), மாவட்ட பிரதிநிதி எஸ்.சாதிக்பாட்ஷா, மண்டபம் ஒன்றிய திமுக., மீனவரணி செயலாளர் எம். நம்புராஜன் (மண்டபம் பேரூராட்சி முன்னாள் சேர்மன்), ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் குலாம், ஒன்றிய துணை செயலர் சி. தில்லை குமார், ஒன்றிய பிரதிநிதிகள் ஆதம் முகமது, கா.ராஜ்குமார், அரசு போக்குவரத்து கழக ( தொமுச) ராமேஸ்வரம் கிளை நிர்வாகி மனோகரன், மண்டபம் தெற்கு மீனவர் கூட்டுறவு சொசைட்டி இயக்குநர் ஆர்.ஆறுமுகம், மூத்த உறுப்பினர் பி.பாண்டியன், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் (ஓய்வு) ஆனந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் எம்.பாரதி, மைக்குண்டு எஸ்.நாகராஜன், மண்டபம் முகாம் அரவிந்த் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளர் சை.சரவணன், வி.முருகானந்தம், மாணவரணி துணை அமைப்பாளர் இப்ராஹிம் ஷா, தகவல் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் த. வெள்ளைச்சாமி, வார்டு செயலர்கள் கஜினி முகமது, ரவி, அன்வர், நல்ல முத்து, மீராசா, இலக்கிய அணி நிர்வாகி மீராசா, விவசாய அணி நிர்வாகி ரகுமான் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிவாரணம் வழங்கிய திமுக., நகர் செயலாளர் டி.ராஜாவுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.