ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சுமார்150 குடும்பங்களுக்கு இராமநாதபுரம் பரக்கத் அறக்கட்டளை கீழக்கரை நகர் சார்பாக அரசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் செய்யது முகம்மது ஹாபிஸ் தொடங்கி வைத்தார். உடன் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹீசைன் சித்திகி, ஜிம்ஆ பள்ளி துணைச்செயலாளர் ஹபிப் முகம்மது தம்பி, சர்வதேச மக்கள் உரிமை மீட்பு கழகம் & ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மற்றும் உதிரம்கொடு உதவி செய் நிர்வாகியுமான S.முகம்மது ஃபஹருல் ஃபயாஸ், நெய்னா முகம்மது, skv சேக், பரக்கத் அறக்கட்டளை சார்பாக இராமநாதபுரம் நகர பொறுப்பாளர் இம்ரான், அன்வாரிய்யா, முகதீம் ராஸிம், அப்துல் காதர், மூர் ஹஸனுதீன், பரக்கத் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரிம் கொரானாவை கட்டுக்குள் வைக்க உதவும் மாவட்ட ஆட்சியர்க்கும், காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கும். பரக்கத் அறக்கட்டளை சார்பாக நன்றி கூறினார்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.