இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்த மீனவர்கள் உள்ளிட்ட ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன்(முன்னாள் அமைச்சர்) இன்று (17.5.2020) வழங்கினார்.
நகர் அதிமுக செயலர் கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் எஸ்.நாகராஜன், டாக்டர் கே. இளையராஜா, சட்டமன்ற தொகுதி முன்னாள் இணை செயலர் தஞ்சி சுரேஷ், அண்ணா தொழிற்சங்க ராமேஸ்வரம் கிளை செயலர் (அரசு போக்குவரத்து கழகம்) எம்.முத்துராமன், துணை செயலர் கே.செல்வக்குமார், நகர் அவை தலைவர் எம்.சுப்ரமணியன், நகர் துணை செயலர் பி.எஸ்.சண்முகம், நகர் அம்மா பேரவை இணை செயலர் எல்.கஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் எம்.நம்புவேல், எம்.முகமது யூசுப், எம்.ரமேஷ், சீனி காதர் முகைதீன், வார்டு செயலர்கள் எம்.கே.கே.எஸ். சாகுல்ஹமீது, எம்.முத்து குமரையா, க.பூபதி ரஜினி காந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.