இராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன் பட்டி, கிழவிகுளம், சிவலிங்காபுரம் ஆகிய பகுதியில் வசிக்கும் 270 -க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளி, மற்றும் முடி திருத்தம் தொழில் செய்யும் குடும்பங்களுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜவர்மன் முக கவசம், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கிராம பகுதிகளான நல்லம நாயக்கன் பட்டி, கிழவிகுளம், சிவலிங்காபுரம் பகுதியில் வசிக்கும் 270 -க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளி, மற்றும் முடி திருத்தம் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மத்திய மாநில அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி இருந்தனர். இதனை அறிந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜவர்மன் பகுதி மக்களுக்கு நேரில் சென்று கொரோனா நிவாரணமாக 270-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு முககவசம் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பொதுமக்கள் அனைவரும் சமூக விலகளை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர். மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் ஒன்றிய கவுன்சிலர்கள் கந்தகிருஷ்ணகுமார், மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.