Home செய்திகள் திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது..

திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது..

by ஆசிரியர்

திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ளது எரும நாயக்கன்பட்டி இங்கு வசித்து வருபவர் மணி இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவரது 13 வயது மகள் காயத்ரி திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் இவர்களது வீட்டின் அருகே முருகன் என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவி காயத்ரிக்கு முதியவர் முருகன் நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார் இதனை பார்த்த கிராம மக்கள் முதியவர் முருகனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com