Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் ஆதரவற்ற தாயிடம் இருந்து -குழந்தையை வாங்கிய தம்பதியினர் உள்பட 7 மீது வழக்கு பதிவு..

மதுரையில் ஆதரவற்ற தாயிடம் இருந்து -குழந்தையை வாங்கிய தம்பதியினர் உள்பட 7 மீது வழக்கு பதிவு..

by ஆசிரியர்

போலி சான்றிதழ் மூலம் 3 குழந்தைகளை சட்டவிரோதமாக தத்து கொடுத்த குழந்தைகள் மீட்பு.  மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விஜய் சரவணன் புகாரின் பேரில் மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் சாலையோரம் வசித்து வந்த சித்ரா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கிய பாலச்சந்திரன் மற்றும் கலாநிதி உள்பட 6 பேர் மன்றம் போலி சான்றிதழ் வழங்கியவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 6 குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர்கள் தகவல். இதில் 3 குழந்தைகள் இறந்ததால் 3 பெண் குழந்தைகளை போலி சான்றிதழ் மூலம் வளர்க்க கொடுத்துள்ளனர். மேலும் முத்துப்பேட்டையை சேர்ந்த கலாநிதி பாலச்சந்தர் தம்பதியினரிடம் காவல்துறையின் விசாரணை செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் குழந்தையை பெற்றதாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு வந்த புகாரை அடுத்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதனை தொடர்ந்து சித்ராவின் உறவினர் சுகன்யா மற்றும் கணேஷ் குமார் உள்பட 3 குழந்தைகளை வாங்கிய ஆறு பேரும் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  முதல் கட்ட விசாரணையில் குழந்தைகள் விற்கப்படவில்லை என்று 2றுதி செய்யபட்டு காவல் இணை ஆணையாளர் தங்க துரை,உதவி ஆணையாளர் சக்கரவர்த்தி தற்போது அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.

இதனையடுத்து தத்து எடுக்காமல் குழந்தைகளை  வளர்த்தவர்கள் 6 பேர் மற்றும் குழந்தைகளை போலி சான்றிதழ் வழங்கியவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விஜய சரவணன் குறிப்பிடுகையில்,  “தங்களுக்கு கிடைத்த தகவலின்படி பழங்காநத்தம் பகுதியில் குழந்தைகளை முறைப்படி பதிவு செய்யாமல் விற்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து அதன் பேரில் அவனியாபுரம் காவல்துறை நடவடிக்கை எடுத்தனர் இதில் சித்ரா என்பவரின் மூன்று பெண் குழந்தைகள் 2 1/2 வயது, மற்றும் 4 வயது இரட்டை குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து மீட்கப்பட்டு மதுரை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் கீழ் கொண்டுவரப்பட்டது. நாங்கள் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று குழந்தைகளை வளர்த்த பெற்றோர் 6 பேர் மற்றும் போலி சான்றிதழ் வழங்கி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் முறையாக பதிவு செய்து குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கவும் இடைத்தரகர்களிடம் அதிகமாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் 89 400 14 914 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

பேட்டி.டாக்டர் விஜய் சரவணன் மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!