Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் எஸ்பி., பிரத்யேக எண்ணிற்கு ஆபாச படம் கோவை தனியார் பள்ளி ஆசிரியர் கைது..

இராமநாதபுரம் எஸ்பி., பிரத்யேக எண்ணிற்கு ஆபாச படம் கோவை தனியார் பள்ளி ஆசிரியர் கைது..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் மற்றும் ஏதேனும் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தன்னை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண்ணை (94899 19722) காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் 2019 நவ.7ல் அறிமுகப்படுத்தினார். இந்த எண்ணில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான பிரச்னைகளுக்கு எஸ்பி., துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் மாவட்டத்தில் கடத்தல், பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள், வழிப்பறி, திருட்டு, மோசடி, கொலை மிரட்டல், உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண்ணுக்கு ஆபாச படங்கள் வந்தன. இது குறித்து திருப்புல்லாணி போலீஸ்காரர் கண்ணன், ராமநாதபுரம் டவுன் காவல் நிலையத்தில் ஜூன் 17ல் புகார் அளித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து எஸ்.பி., வருண் குமாருக்கு ஆபாச படங்கள் அனுப்பிய எண்ணை இராமநாதபுரம் சமூக ஊடக பிரிவு போலீசார் கண்காணித்தனர்.

அந்த எண் கோவை மாவட்டம் சரவணம்பட்டி, சிவனாந்தபுரம் மாருதி நகர் கணேசன் மகன் பிரேம் கிரண் என தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு பிரிவு குழுவினர் கோவை சென்று பிரேம் கிரணை கைது செய்தனர். அவரது அலைபேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பெண்கள், குழந்தைகள், மற்றும் ஆண்கள், திருநங்கைகளின் ஆபாச படங்கள் வீடியோ பதிவுகள இருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள், ஆண்களின் அலைபேசிகளுக்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சிலரை மிரட்டும் ஆடியோ பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதன்படி, கைது செய்யப்பட்ட கோவை தனியார் பள்ளி ஆசிரியரான பிரேம் கிரேண் (38) இடம் போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என சரவணம்பட்டி போலீசில் பிரேம் கிரணின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!