Home செய்திகள்கீழக்கரை செய்திகள் 144 தடை உத்தரவை மீறிய 12077பேர் மீது வழக்குப்பதிவு ..

144 தடை உத்தரவை மீறிய 12077பேர் மீது வழக்குப்பதிவு ..

by ஆசிரியர்

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 06.05.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 12076 நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 6306 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது 1 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 நபர்களை கைது செய்து, 10 லிட்டர்சாராய ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். IPS.,  அறிவுறுத்தியுள்ளார். உயிர்காக்க_ஊரடங்கு…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!