9
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் சாலை விதிகளை கடைபிடிக்காமல் வருபவர்களை அமரவைத்து போக்குவரத்து விதிகளை பற்றி எடுத்துக் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத், நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார், தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.