ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் முன்னிலையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி மகன் மருமகள் இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை கையில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், திமுக எம்பி ஆ. ராசா முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததை கண்டித்தும், ராமேஸ்வரத்தில் ரேஷன் கடையில் முறைகேடாக பொருள் வழங்கியதை தட்டி கேட்ட முருகன் என்பவர் மீது திமுக கட்சியினர் தாக்கியதற்கு போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் தமிழகத்தில் பத்திரிக்கையாளருக்கு எந்தவித பாதுகாப்பும் இந்த அரசு வழங்கப்படவில்லை என்றும் போதைப் பொருள்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்த முடியாத அரசு தமிழ்நாட்டுக்கு தேவைதானா என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதிமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ஓம் சக்தி நகர் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் இந்நாள் மாவட்ட செயலாளர் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/02/1000549376.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/02/1000549510.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/02/1000549395.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/02/1000549375.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/02/1000549417.jpg?resize=1024%2C461&ssl=1)
You must be logged in to post a comment.