Home செய்திகள் கூத்தியார்குண்டு நான்கு வழி சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து: முதியவர் பலி.

கூத்தியார்குண்டு நான்கு வழி சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து: முதியவர் பலி.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாவில் வசித்து வருவபர் சுப்பையா (வயது 70). இவர்  காலை 9 மணியளவில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது, மதுரையில் இருக்கு திருமங்கலம் நோக்கி சென்ற கார் அவரது டூவீலரில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com