12
கீழக்கரை தோணிப்பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கீழக்கரை துணை மின் நிலையம் உதவி செயற் பொறியாளர் பால்ராஜ் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கு காரணம் தெருக்களில் திரியும் மனநலம் குன்றியவர் என அறியப்படுகிறது. பால்ராஜ் வாகனத்தில் செல்லும் பொழுது மனநிலை குன்றியவர் இடையில் வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
விபத்துக்குள்ளான இருவரையும் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பின் ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
செய்தி மூலம் : மக்கள் டீம்
You must be logged in to post a comment.