32
திருச்சியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 31), இவர் ஏர்இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் திருச்சியில் பணி புரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்
மதுரைக்கு மாற்றலாகி வந்தார். நேற்று (14/03/2019) இரவு 11 மணியளவில் வேலையை முடித்து விட்டு பெருங்குடி அருகே சென்று கொண்டிருந்த போது காரியாபட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் பலியானார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2019/03/9FB779FD-CB20-4F2C-9A7F-48324AB7AE46-150x150.jpeg?resize=150%2C150)
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
You must be logged in to post a comment.