Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை பெருங்குடி அருகே சாலை விபத்தில் ஏர் இந்தியா விமான ஊழியர் பலி..

மதுரை பெருங்குடி அருகே சாலை விபத்தில் ஏர் இந்தியா விமான ஊழியர் பலி..

by ஆசிரியர்
திருச்சியை சேர்ந்தவர்  குணசேகரன் (வயது 31), இவர் ஏர்இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் திருச்சியில் பணி புரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மதுரைக்கு மாற்றலாகி வந்தார். நேற்று (14/03/2019) இரவு 11 மணியளவில் வேலையை முடித்து விட்டு  பெருங்குடி அருகே சென்று கொண்டிருந்த போது   காரியாபட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த  போலீஸார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com