திண்டுக்கல் மாவட்ட பாமக பாராளுமன்ற உறுப்பினர் திலகபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்..
Daily Archives
March 25, 2024
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -25
(கி.பி 1299-1922)
காண்ஸ்டாண்டி நோபிள் நகரத்தின் ரோமானிய சக்கரவர்த்தியின்
அரண்மனை உலகத்தின் சொர்க்கமாக இருந்தது.
அரண்மனையின் பிரமாண்டங்களும்
தங்கத்தால் இழைக்கப்பட்ட விதானங்களும்,
தூண்களும்,
பலவகை கற்கள் புதைக்கப்பட்ட,
ஆசனங்களும்,
கட்டில்களும்,
மெத்தென்ற பல்வகை விரிப்புகளும்,
அரண்மணையில்
கூண்டுகளில்
அடைக்கப்பட்ட
புலி,சிங்கங்களும்,
ஏராளமான பறவைகளும்,
நீருற்றுகளும்,
நதிகளில் இருந்து வெட்டப்பட்ட கால்வாய்களில்
நிறைந்து ஓடும் தண்ணீரும்,
சுவர்களின் இடையே
பதிக்கப்பட்ட கற்குழாயின் வழியாக வழிந்தோடும் நீரினால் ஏற்படும் குளிர்ச்சியும்,
பிரமாண்டமான அறைகளும்,
விதானங்களும்,
முற்றங்களும்,
மன்னரின் உடற்பயிற்சி கூடமும்,
அந்தப்புற அழகுகளும்,
என ஒரு புதிய உலகமே பூமியில் இருப்பதுபோல அதிசயித்துப் போனார் உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல் பாதில்.
அரண்மனை முழுவதும் கையகப்படுத்தப்பட்டு
மன்னரின் குடும்பம் குடியேறியது.
1000 வருட பராம்பரிய
ரோமானியர்களின் ஆட்சியை முஹம்மது அல் பாதில் முடிவுக்கு கொண்டு வந்தார்.
முஸ்லீம்களின் கனவாக இருந்த காண்ஸ்டாண்டி நோபிள் நகரம் எதிர்கால இஸ்லாமிய உலகின் கிலாபத் தலைநகராக கட்டமைக்க வேண்டும் என்று முஹம்மது அல்பாதில் உறுதி கொண்டார்.
துருக்கிய பேரரசு உஸ்மானிய பேரரசாக மாறியது.
காண்ஸ்டாண்டி நோபிள் உஸ்மானிய பேரரசின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
காண்ஸ்டாண்டி நோபிள் வெற்றி கொள்ளப்பட்டதை அறிந்த முஸ்லீம்கள்,
உலகின் பல பாகங்களின் பள்ளிவாசல்களில்
சிறப்பு தொழுகையும்
பிரார்த்தனையும் நடத்தி கொண்டாடினார்கள்.
உலகின் முஸ்லீம் மன்னர்கள் உஸ்மானிய பேரரசர்
முஹம்மது அல் பாதில் அவர்களுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பினார்கள்.
துருக்கிய பேரரசில் முஸ்லீம்களிடம் ஜகாத் 2.5%வசூல் செய்யப்பட்டது.
முஸ்லீமல்லாத மற்ற மக்களிடம் ஜகாத்தைவிட மிகக்குறைந்த வரியே ஜிஸியா வரியாக
வசூலிக்கப்பட்டது.
வேறு எந்த வரிகளும் வசூலிக்காதால்
முஸ்லீம்களின் படையெடுப்பால் வெளியேறிய யூதர்களும்,
கிறிஸ்தவர்களும்
தாய் நாட்டிற்கே திரும்பினார்கள்.
மற்ற கிறிஸ்தவ நாடுகளில் மக்களை கசக்கி பிழிந்து வசூலிக்கப்பட்ட வரிவிகிதங்களாலும்
அதிகாரிகள், மதகுருமார்களின்
கெடுபிடிகளாலும்,
வெறுத்துப் போன
யூத , கிறிஸ்தவ மக்கள் காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் ஏராளமாக குடியேறினர்.
இங்கு அவர்களுக்கு
எல்லா உரிமைகளும்
குறிப்பாக மத வழிபாட்டு உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டது.
தேவாலயங்கள் பாதுகாக்கப்பட்டன.
கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தால் வரி செலுத்த தேவையில்லை.
இவர்கள் ராணுவத்தில் ஆபத்தான பிரிவுகளில் பணிபுரியத் தேவையில்லை.
இதுபோன்ற காரணங்களாலும்,
இன்றைக்கு ஜிஸ்யா வரியை பொய்யாக கட்டமைக்கிற பாசிசவாதிகளின்
கூற்றை சிதைக்கிறபடி
ஏராளமான யூத கிறிஸ்தவ மக்கள்
ஜிஸ்யா வரியால் கவரப்பட்டு துருக்கிய பேரரசின் பகுதியில் குடியேறினர்.
கிறிஸ்தவர்களுக்கு
முழு உரிமைகள் வழங்கப்பட்டன
முஹம்மது அல் பாதில் நிறைய நிர்வாக சீர்திருத்தங்களை செய்தார்.
முஹம்மது அல்பாதில் அவர்கள் நகரைச்சுற்றிவந்த போது ஒரு தேவாலயத்தை கண்டார்.
அதிசயித்து அப்படியே நின்று விட்டார்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் சிறப்பு கண் மருத்துவமனை திறப்பு..
மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து தமிழகத்தில் மதுரையில் துவக்கியுள்ளது. தமிழக மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சை அளிக்கும் அதன் 5வது சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தளபதி எம்.எல்.ஏ மதுரை வடக்கு, டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, மேச்சிவிஷனின் தலைவர் ஏ.கணேசன், மேக்சிவிஷன் இயக்குநர் வி.எஸ்.சுதீர், மேக்சிவிஷன் குழுமத்தின் சிஇஓ மற்றும் டாக்டர் ஷிபு வர்க்கி, மேக்சிவிஷன் பிராந்திய மருத்துவ இயக்குனர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாட்டில் ‘வெளிச்சம்’ திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, சேலம் மற்றும் இப்போது மதுரையில் தனது 5வது சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மூலம் தமிழக மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சையை வழங்குகிறது.
மதுரையில் புதிதாக நிறுவப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை 6000 சதுர அடி பரப்பளவில், அனைத்து சமீபத்திய விஷன் டையாக்னஸ்டிக் கருவிகள் மற்றும் சூப்பர ஸ்பெஷாலிட்டி கண் பராமரிப்பு அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள், கேட்ராக்ட் மற்றும் ரெஃப்ராக்டிவ் பிழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேம்பட்ட ரோபோ தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாடுலர் ஹெப்பா ஃபில்டர்ஸ், 16 க்கும் மேற்பட்ட ஆலோசனை அறைகள், டையாக்னஸ்டிக் நிலையங்கள் மற்றும் விசாலமான ஆப்டிகல் ஸ்டோர்களுடன் கூடிய 4 அதிநவீன தொற்று சுட்டுப்பாட்டு ஆபரேஷன் தியேட்டர்கள் வரை உள்கட்டமைப்பு பரவியுள்ளது.
கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் குழுவை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. சராசரியாக 25 வருடங்கள் கண் பராமரிப்பில் அனுபவம் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை விரிவான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோவில் திருவிழா..
மதுரை அவனியாபுரத்தில் மகா காளியம்மன் திருக்கோவிலில் 74 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பால்குடம், அலகு காவடி பறவை காவடி, தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். அவனியாபுரம் பசும்பொன் நகரில் உள்ள அருள்மிகு மகா காளியம்மன் திருக்கோயிலில் 74 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. மகாகாளியம்மன் திருக்கோவில் மறவர் சங்கத் தலைவர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் வேல்முருகன், செயலாளர் முத்து மணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மகா காளியம்மன் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பத்து நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று ஐந்தாம் நாள் விழாவாக பால்குடம் மற்றும் பறவை காவடி அழகு காவடி தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் குழந்தைகளுடன் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் மு.க.ஸ்டாலின்; கனிமொழி கருணாநிதி புகழாரம்..
written by Abubakker Sithik
ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் முயற்சித்த போது மக்களின் பக்கம் நின்று ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி புகழாரம்
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி 24/03/2024 அன்று தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கினர். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடாக உணரக்கூடிய வகையில் உள்ளது. நாடும் நமது, நாற்பதும் நமது என்ற வகையில் நாம் பணியாற்ற வேண்டும் எனவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டு தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியையும், ஏன் வெள்ள நிவாரணம் கூட தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜகவை அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி தற்போது அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். வெள்ளம் பாதித்த நேரங்கள் கூட வராத பிரதமர் தற்போது வருகிறார். வந்து திமுகவை அழித்து விடுவதாக பேசி வருகிறார் திமுகவை யாராலும் அழிக்க முடியாது, அழித்து விடுவேன் என சொன்னவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர்.
திமுக ஆட்சி மூலம் இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. அதனால் தான் தற்போதைய இந்த தேர்தல் அறிக்கையில் கூட மகளிர் உரிமைத் தொகையை நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும் எனவும், அதுபோல் காலை உணவு திட்டத்தையும் நாடு முழுவதும் அமல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை டீசல் விலை மற்றும் கேஸ் விலை ஏற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது இந்தியா கூட்டணி அரசு வரும் போது பெட்ரோல் விலை ரூபாய் 75, டீசல் விலை ரூபாய் 65, அதுபோல் காஸ் சிலிண்டர் விலை 500 ஆக அனைத்தும் குறைக்கப்படும். மக்களை விலைவாசியிலிருந்து காப்பாற்றும் அரசாக அந்த அரசு செயல்படும் எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கு எந்தவித நிதி உதவியும் செய்யாமல் அதே போல ஒரு பைசா கூட வழங்காமல் தமிழ்நாட்டிலிருந்து வரி வசூல் பண்ணி அங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்கள் நமக்கு திருப்பி கொடுப்பது 26 பைசா, ஆனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து 1 ரூபா வரி கொடுத்தால் 2 ரூபாய் 2 பைசா. எந்த அளவுக்கு அவர்கள் தமிழகத்தை, தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல இவர்கள் கொண்டு வந்த சட்டத்திற்கு டெல்லியில் ஆதரவு கொடுத்தது அதிமுக. நாங்க இப்போது பிரிந்து நிற்கிறோம் என்றால் நம்பாதீர்கள். இரண்டு ஸ்டிக்கரும் மீண்டும் இணைந்து கொள்ளும். இங்கே இருக்கும் பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்ற போது, முதலமைச்சர் மக்கள் பக்கம் நின்று ஆலையை மூட நடவடிக்கை எடுத்தார். வரக்கூடிய இந்த தேர்தலிலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் இருந்தே பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி இங்கு ஆட்சி அமைக்க வேண்டும். நம்முடைய இளைஞர்கள் கல்விக்காக வாங்கி இருக்கக் கூடிய கடன் ரத்து செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்க வெளியூர் போகும்போது ஒவ்வோர் இடத்திலும் டோல்கேட்டில் நிறுத்தி காசு வாங்குறாங்க அந்த டோல்கேட்டில் வாங்கக்கூடிய காசு எல்லாம் நிறுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து மீண்டும் உங்களோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் அரங்கம், மாரியம்மன் கோயில், TMC காலனி ஜங்ஷன், காசி நாடார் ஆயில் மில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில், உருண்டையம்மன் கோவில் அருகே, கருப்பட்டி சொசைட்டி, பூபால்ராயபுரம், திரேஸ்புரம் ஜங்ஷன், புது தெரு, மட்டக்கடை, 2 ஆம் கேட் போஸ் திடல், தேரடி, பள்ளிவாசல், PPMT ஜங்ஷன், சுமங்கலி கல்யாண மண்டபம், பீங்கான் ஆபிஸ், பக்கில்புரம், KSPS தியேட்டர், சிதம்பர நகர், பிரையண்ட் நகர் 12வது தெரு, 3ஆம் மைல், பழைய பஸ்டாண்டு, அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனிமொழி கருணாநிதி பிரச்சாரம் செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தென்காசியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் 100% நேர்மையாக வாக்களிப்போம், தேர்தல் நாள் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூனை பறக்க விட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி கோட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் V.M.சிவக்குமார், இ.சாமத்துரை, M.கலைச்செல்வி, P. டேவிட் ஜெயசிங், தென்காசி கோட்டாட்சியர் அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அமோக வெற்றி பெறுவார்; அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் பேச்சு..
written by Abubakker Sithik
தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்; செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு..
தென்காசி தொகுதி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் பேசினார். தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் இலஞ்சி தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.பி.அருள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ஆகியோருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதற்கு நான் அயராது பாடுபடுவேன் இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகள் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். ராணி ஸ்ரீகுமார் மருத்துவ பட்டம் பெற்றவர். இவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும். நமது வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் நிச்சயமாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவர் தென்காசி தொகுதி மக்களுக்கு தேவையான பணிகளை அறிவு பூர்வமாக மேற்கொள்வார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளார். எனவே தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் 27 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் வருகை தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் வழக்கறிஞர் கனிமொழி, கென்னடி, தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம் ஷெரிப், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மா. செல்லத்துரை, இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, எஸ்கே முத்துப்பாண்டி, வடகரை சேக்தாவூது, வீ.கே.புதூர் சேசுராஜன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம் ரஹீம், சீவநல்லூர் கோ சாமித்துரை, தமிழ்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தென்காசி வல்லம் எம். திவான் ஒலி, ஆர்.எம். அழகு சுந்தரம், செங்கோட்டை ஆ.ரவிசங்கர், கடையம் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், கடையநல்லூர் சுரேஷ், நகர திமுக செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன், கடையநல்லூர் அப்பாஸ், சுரண்டை ஆ.கணேசன், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம், பண்பொழி அ.ராஜராஜன், சாம்பவர் வடகரை முத்து, ஆய்க்குடி சிதம்பரம், அச்சன்புதூர் வெள்ளத்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் குற்றாலம் துரை என்ற இராமையா, தென்காசி யூனியன் தலைவர் வல்லம் சேக்அப்துல்லா ஆகியோருடன்,
கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரகுமான், வழக்கறிஞர் சு.வேலுச்சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி குற்றாலம், டி.ஆர் கிருஷ்ணராஜா, வழக்கறிஞர் அணி சு.தங்கராஜ் பாண்டியன், மாணவரணி ரமேஷ், தொண்டர் அணி இ.இசக்கி பாண்டியன், சிறுபான்மை அணி இஞ்சி இஸ்மாயில், வர்த்தக அணி முத்துக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மேலகரம் வேணி வீரபாண்டியன், இலஞ்சி சின்னத்தாய், ஆய்க்குடி சுந்தர்ராஜன், சாம்பவர் வடகரை சீதா லட்சுமி, காளியம்மாள் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய பிள்ளை வலசை இ.வேலுச்சாமி, கிளாங்காடு சந்திரசேகரன், வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான், திமுக பேச்சாளர்கள் கடையநல்லூர் எம்.என்.இஸ்மாயில், வெல்டிங் மாரியப்பன், குற்றாலிங்கம் முத்துவேல், காசிதர்மம் துரை, மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்!- தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தர்ராஜன்..
by Askar
written by Askar
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக தமிழிசை சவுந்திரராஜன் வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்தநிலையில், ஏன் இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்திற்கு வந்துள்ளேன் என்பதை தமிழிசை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்…
நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு விளக்கமாக இதை பதிவு செய்கிறேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 25 வருடங்கள் ஆகிறது. மாநிலச் செயலாளர் ,தேசிய செயலாளர் போன்ற உயர் பதவிகளை எனது கட்சியின் தலைமை வழங்கியது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் என்ற உயரிய பதவியையும் எனக்கு வழங்கியது.
அதற்கு எல்லாம் மேலாக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியை மத்தியில் ஆளும் பாஜக அரசு எனக்கு வழங்கியது. மேலும் என் தாய்மொழி தமிழ் மொழியில் பேசுகின்ற பாண்டிச்சேரி மாநிலத்திலேயே பணியாற்றுகின்ற வாய்ப்பையும் பாஜக அரசு எனக்கு வழங்கியது. தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு மாநிலங்களை ஆளுகின்ற உயரிய ஆளுநர் பொறுப்பை எனக்கு மத்திய அரசு வழங்கியது. ஆளுநர் என்றாலே பெருமிதம் புகழ் அதிலும் இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா ? அதற்கான மரியாதையும் மகுடமும் மிகவும் உயர்ந்தது அல்லவே. அதை பணிவோடு ஏற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வந்தேன். ஒரு ஆளுநராக முன் உதாரணமான பல சீரிய திட்டங்களை நான் செயல்படுத்தினேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர்.
தற்போது தேர்தல் காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தப் புகழ் தொடர வேண்டும். மீண்டும் திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக அரிய அணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவி நான் துறந்தேன். நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும். வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும் என்ற காரணத்தினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.
தேசிய நீரோட்டத்தில் தென்சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறு நடை போட வேண்டும் என்ற சிந்தனையால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். எனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தென்சென்னை மக்கள் எனக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நான் நிற்கின்றேன் ஆளுநராக இருந்த நான் உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன் விரும்பி வந்திருக்கின்றேன் வெற்றியை தாருங்கள் உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு..
by Askar
written by Askar
மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு..
மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக பாஜக இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 111 பேர் அடங்கிய 5-வது பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாயா மேற்கு வங்க மாநிலம் தாம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நவீன் ஜிண்டால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தொழிலதிபர் நவீன் ஜிண்டால் நேற்று பாஜகவில் இணைந்தார். இவர் ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா தொகுதி யில் போட்டியிடுவார் என அறிவிக் கப்பட்டுள்ளது.
மேனகா காந்தி (சுல்தான்பூர்) நித்யானந்த் ராய் (உஜியார்பூர்), கிரிராஜ் சிங் (பெகுசாரை), ரவி சங்கர் பிரசாத் (பாட்னா சாஹிப்), நடிகை கங்கனா ரணாவத் (மண்டி), சீதா சோரன் (தும்கா), ஜெகதிஷ் ஷெட்டர் (பெல்காம்), கே.சுதாகரன் (சிக்கபல்லாபூர்), தர்மேந்திர பிரதான் (சம்பல்பூர்), சாம்பிட் பத்ரா (புரி), ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் (மீரட்) உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் சஹா 19 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். இதையடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் 31 ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சனுடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதில் ஓமர்சாய் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மில்லர் 12 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 45 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ரோகித் 43 ரன்களும், நமன் 20 ரன்களும், ப்ரவிஸ் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் மும்பை அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டத்தில் மும்பை அணி ஒருசில விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருந்தார். ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஹர்திக், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3வது பந்தை சிக்சருக்காக தூக்கி அடித்த பாண்ட்யா, எல்லைக்கோடு அருகே கேட்ச்சாகி அவுட்டானார்.
முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
You must be logged in to post a comment.