மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகிலுள்ள வடிவேல்கரை காட்டுப்பகுதியில் கண்மாய்க்கரை உள்ளது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள், இளைஞர்கள் வலை அமைத்து இருந்தனர்.இந்நிலையில் இன்று காலை வலையின் ஒரு பகுதி அறுந்து இருப்பதைக் கண்ட மீன்பிடிப்பாளர், வலையை இழுத்துப்பார்த்த போது வலைக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது.அதைக்கண்டதும் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து வலைக்குள் பாம்பு வசமாக சிக்கிக்கொண்டதால் அதனை மீட்க முடியாததால் தொடர்ந்து காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கு இளைஞர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் பாம்பை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு பாம்பை மீட்டனர் தொடர்ந்து அந்த பாம்பை நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விட்டுவிட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.