Home செய்திகள் பல ஆண்டுகளாக உடைந்த வாய்க்கால் பாலம். கண்டுகொள்ளாத மாநகராட்சி. பறிபோனது உயிர் ஒன்று ..எடுப்பார்களா

பல ஆண்டுகளாக உடைந்த வாய்க்கால் பாலம். கண்டுகொள்ளாத மாநகராட்சி. பறிபோனது உயிர் ஒன்று ..எடுப்பார்களா

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94 வது வார்டு காந்திஜி முதல் குறுக்குதெரு மணி இம்பாலா தியேட்டர் செல்லும் பாதையில் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிதலமடைந்து பொதுமக்கள் அந்தக் வாய்க்கால் பாலத்தில் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர் பொதுப்பணித் துறையிடம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுகிறது இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திருநகரை சேர்ந்த கருப்பையா என்பவர் சைக்கிளை ஓரத்தில் நிறுத்திவிட்டு பாலத்தை கடந்து செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக அவர் மகன் தகவல் தெரிவித்தார் எனினும் அவர் காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் மேலும் உயிர்பலி ஆகாமல் இருக்க மாநகராட்சியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் இந்த பாலத்தை சீர்செய்து பொதுமக்கள உயிர் காக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா????

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!