கீழக்கரை வடக்குத்தெரு சமூகநல தர்ம அறக்கட்டளை-NASA சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் மற்றும் மாணவர் கையேடு வெளியீட்டு விழா 18.12.2021 அன்று வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் மாணவர் ஃபரூஸ் இப்னு துல்கருணை கிராஆத் ஓதி ஆரம்பம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர்K.S. ரெத்தின முஹம்மது தலைமை தாங்கினார். கீழக்கரை முஹைதீனியா கல்வி குழுவின் துணை தலைவர் M.M.S. முஹைதீன் இப்றாஹிம் முன்னிலை வகித்தார்.
TNPSC மாணவர் கையேடு வின் முதல் பிரதியை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர் வெளியிட முஹைதீனியா பள்ளி மாணவர் முஹம்மது இர்ஃபான் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை முஹைதீனியா கல்வி குழுவின் துணைதலைவர் வெளியிட கல்லூரி மாணவர் ஹஸன் நஷிர் பெற்றுக் கொண்டார் NASA அறக்கட்டளையின் அறங்காவலர் ஜனாப். பஷிர் அவர்கள் வெளியிட அல் மதரஸத்துல் நிஸ்வானிஸ் ஸாலிஹாத் மதரஷாவின் பிரதிநிதி நவீத் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா, மகாத்மா காந்தி ஸ்கூல் ஆஃப் சிவில் சர்வீஸின் ஒருங்கிணைப்பாளர் S.S.M. சிக்கந்தர் அலி உரையாற்றினார். TNPSCன் அனைத்து விதமான சந்தேகங்களை கேட்டுப்பெறவும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது..
மற்றுமொரு சிறப்பு விருந்தினராக கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் S.M.N. அஹமது ஹுசைன் ஆசிஃப் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நன்றியுரையாக NASA அறக்கட்டளையின் தலைவர் நல்ல இப்றாஹிம் அவர்கள் உரையாற்றினார்.
You must be logged in to post a comment.