குடும்ப பிரச்சினையால் மனமுடைந்தவர் விஷம்குடித்து தற்கொலை.மதுரைஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் திருமலை தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லியாகத்அலி வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். அவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்குசிகிச்சையில் இருந்தவர்சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ராஜா உசேன் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் …,,,,, இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் மேலாளர் திட்டியதால்சீட்டு கம்பெனி பெண்ஊழியர் விஷம் தின்று தற்கொலைமதுரை பழங்காநத்தம் மணிகண்டன் தெரு மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்த பிரசாத் மனைவி லட்சுமி 30. இவர் திருநகரில் உள்ள ஒரு சீட்டு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த கம்பெனியின் மேனேஜர் லட்சுமியை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த லெட்சுமி வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்துஇவரது கணவர் எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.