23
ஈகை திருநாளான நோன்பு பெருநாள் தொழுகை இன்று (13/05/2021) புனித நகரமான மக்கா, மதீனா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
வளைகுடா நாடுகளில் அரசாங்க வழிகாட்டுதலின் படி திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த வருடம் தாக்கிய கொரோனோ வைரசின் தாக்கம் இந்த வருடமும் வீரியமாக தொடர்வதால் தமிழகத்தில் வணக்கதலங்களில் கூட தடை இருப்பதால் தங்கள் இல்லங்களில் குடும்பத்தாருடன் தொழுகை நடத்தினர்.
You must be logged in to post a comment.