கரோனா தடுப்பு பணிகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தில் ரூ.1 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதியாக வழங்கியுள்ள மதுரையைச் சேர்ந்த ரயில் எஞ்சின் டிரைவர் ஜேம்ஸ் செல்வராஜ். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய பொருளாதாரமும் மிகுந்த சரிவைக் கண்டுள்ளது. இந்த பேரழிவிலிருந்து பொதுமக்களைக் காக்க பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அனைத்து ரயில்வே ஊழியர்களும் அதிகாரிகளும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.
மதுரை கோட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய ஐந்து நாள் சம்பளத்தை இந்த நிதிக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுவரை மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் சார்பாக ரூபாய் 95 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முத்தாய்ப்பாக பயணிகள் ரயில் ஓட்டுனர் ஜேம்ஸ் செல்வராஜ் தனது மாத வருமானத்திலிருந்து ரூ.1 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். அவரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.