12
கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளி பின்புறம் இயங்கி வந்த நியாய விலை கடை எண்.4, தற்போது இடம் மாற்றப்பட்டு வடக்கு தெரு ஜமாத்துக்கு உட்டபட்ட பழைய வைக்கோல் பேட்டை இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று (18/06/2019) காலை வடக்குத் தெரு ஜமா அத் தலைவர் கே.எஸ்.ரத்தினமுஹம்மது தலைமையில், துஆவுடன் தொடங்கப்பட்டது. இத்தொடக்க்விழாவில் மக்கள் டீம் காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கடை ஜெயராணி என்பவரை பொருப்பாளராக கொண்டு, ஊழியர்கள் செந்தில் குமார் மற்றும் கலீல் ஆகியோர் நிர்வாகத்தில் செயல்படுகிறது. இந்த 4ம் எண் கடை மூலம் 17,18 மற்றும் 19ம் வார்டு மக்கள் பயனடைவார்கள்.
You must be logged in to post a comment.