13
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.!
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்கவும், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்துக்கு மேற்பட்டோர் கூடவும், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவும், ஜோதி எடுத்துவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டுவரவும், வாடகை வாகனங்களில் விழாவிற்கு மக்களை அழைத்துவரவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.