9 நான்காம் கட்ட ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.! மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு.
- இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை
- 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு.
- கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி.
- கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு.
- பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்.
- பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம்.
- திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம் – 50 நபர்களுக்கு மேல் கூட தடை.
- மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி.
- பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை.
- கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம் – 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை.
- பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.
- மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம்.
- அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
- பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- மெட்ரோ ரயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
- விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் , சிவப்பு மண்டலங்கள் குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம்.
- வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்.
- அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம்.
- மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது.
- சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை.
You must be logged in to post a comment.