ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 34 வது போட்டி நடைபெற்றது, இதில் தமிழ்நாடுகோவா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், உள்ளிட்ட 32 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர், தேசிய அளவிலான நடுவர்கள்குழு போட்டியை 5 நாட்கள் கீழக்கரையில் நடத்தியது. இறுதிப்போட்டியில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த ஆண்கள் அணியினர் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கோப்பையை தட்டி சென்றது, இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டி வாழ்த்தினார், இதில் பல்வேறு மாநிலம் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய அளவிலான விளையாட்டு சங்கம் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Daily Archives
March 5, 2024
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜெகன் தலைமை வகித்தார் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பாய் ஜெயராணி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் அகிலா வரவேற்று பேசினார். தேசிய திறனாய்வு தேர்வு வெற்றி பெற்ற மாணவர்கள் மாதேஸ்வரன், சிவ சூரியா ஆகியோருக்கு சுரண்டை போலீஸ் எஸ்ஐ சின்னத்துரை பொன்னாடை அணிவித்து பாராட்டி கேடயம் வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் இலஞ்சி கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார், புதுச்சுரண்டை சேகர பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா, உதவி ஆசிரியர்கள் சார்ந்த குமாரி, சுந்தரி, மதி, அன்பு கிரேஸ், அமலா, பிரபா, சுபா, ஜோதி மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும், தென்காசி மாவட்டம் சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜேபஸ் பொன்னையா தலைமை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியர் செல்வராணி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பொடி மோனிகா வரவேற்றார். தென்காசி எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தேர்வில் வெற்றி பெற்ற மகாபாரதி, புஷ்பராஜ், திருமலைச் செல்வி ஆகியோருக்கு கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -5
(கி.பி 1299-1922)
துருக்கியில் ஒரு பகுதியில் ரோமர்களின் சிற்றரசாக, புருஷாநகரை தலைநகராக கொண்டஅரசு இருந்தது.
உஸ்மான் அவர்களின் அறிவுரைப்படி, இஸ்லாமிய குழுக்கள் ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று இஸ்லாமிய நெறிகளை பிரச்சாரம் செய்தது.
இதன் ஒரு குழுவை புருஷா சிற்றரசன் சிறைபிடிக்க அவர்களை மீட்க புருஷா நகரை நோக்கி உர்கான் தலைமையில் சென்ற படை கோட்டையை
முற்றுகை இட்டது.
உலக வரலாற்றில் அதிசயமாக 10 ஆண்டு காலம் இந்த முற்றுகை நீடித்தது.
உஸ்மானியர்களின்
சிறுபடை எப்போதும் புருஷா கோட்டையை சுற்றி நின்றது.
10 வருடங்கள் தாக்குப்பிடித்த புருஷா சிற்றரசன் நகரிலிருந்து கோட்டையின் அரவமற்ற ஒரு பகுதியில் சுரங்கம் அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வெளியேற்றினான்.
இறுதியில் தானும் தனது குடும்பத்தினரும்
தங்கம் வெள்ளி மற்றும் உயர்ந்த ஆபரணங்கள் என எடுத்துச்செல்லும் அளவிற்கு, பொருள்களோடு தனது மெய்காவல்
படையோடு சுரங்கம் வழியாக தப்பி ரோமாபுரிக்கு சென்றுவிட்டான்.
ஒருநாள் இரவில் கோட்டையை வலம் வந்த உர்கான் ஒரு அரவமற்ற பகுதியில்
விளக்குகள் ஊர்ந்து செல்வதை வைத்து கோட்டையிலிருந்து
மக்கள் வெளியேறுவதை புரிந்து கொண்டு அதை தடுக்காமல் விட்டுவிட்டார்.
எல்லாம் முடிந்த பிறகு
அதே சுரங்கம் வழியாக வீரர்களை உள்ளே அனுப்பி கோட்டை கதவுகளை திறந்து விட வைத்து
நகருக்குள் உஸ்மானிய படை நுழைந்தது.
புருஷா நகரை எந்த சேதாரமும் இல்லாமல் உஸ்மானிய படை கைப்பற்றியது.
அதை அழகிய நகராக உர்கான் சீரமைத்தார்.
மாளிகைகள் கட்டப்பட்டன.
சாலைகள் போடப்பட்டன.
அழகிய உஸ்மானிய தலைநகராக குறுகிய காலத்தில் “புருஷாநகரம்” உருவாக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தின் மன்னர் உஸ்மான் மரணமடைந்தார்.
உர்கான் அடுத்த உஸ்மானிய ஆட்சியாளராக பதவி ஏற்றார்.அவரின் பதவி ஏற்பில் உஸ்மானின் வாளை அணிந்து கொண்டார்.
தனது கோட்டையில் உஸ்மான் அவர்கள் பயன்படுத்திய கொடியை ஏற்றச் செய்தார் .
மங்கோலியர்
களிடமிருந்து கோன்யா
நகரம் கைப்பற்றப்பட்டது .
பல சிற்றரசுகள் தானாக முன் வந்து உஸ்மானிய அரசின் கீழ் இணைந்து கொண்டன.
இணையாத சிற்றரசுகளை சிறிய படைகளை அனுப்பி வென்று உஸ்மானிய அரசோடு உர்கான் இணைத்துக் கொண்டார்.
மங்கோலியர்கள் ஒரு பகுதியை வென்று ஆட்சி செய்யாமல் அப்படியே விட்டு விட்டு அடுத்த பகுதிக்கு நகர்ந்து விடுவார்கள்.
இப்படியே மத்திய ஆசியாவின் பல பகுதிகள் மன்னரும் ஆட்சியும் இல்லாமல் தவித்தன.
மத்திய ஆசியப்
பகுதிகளில் குழப்பங்கள் நிலவியது.
இதனை சரியாகப் பயன்படுத்தி கொண்ட மறைந்த மன்னர் உஸ்மான் அவர்கள் மிகப் பெரிய உஸ்மானிய பேரரசை நிறுவ அடித்தளம் இட்டார்.
அதனை சரியாக மன்னர் உர்கானும் பயன்படுத்தி தனது எல்லைகளை விரிவாக்கினார்.
உஸ்மானின் மூத்தமகன் அலாவுதீனே பட்டத்து இளவரசராக முடி சூடவேண்டும்.
ஆனால் இளைய மகன் உர்கான் எப்படி மன்னராக முடிந்தது?
அதன் ரகசியங்கள் என்ன?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திரையரங்குகளில் ஈஷா மஹா சிவராத்திரி விழா நேரலை; இந்தியா முழுவதும் 35 பெரு நகரங்களில் ஏற்பாடு
written by Abubakker Sithik
PVR Inox திரையரங்குகளில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; இந்தியா முழுவதும் 35 பெருநகரங்களில் ஏற்பாடு
திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மஹாசிவராத்திரி விழா PVR Inox திரையங்குகளில் மார்ச் 8-ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தோர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும். கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தியாவின் தலைசிறந்த இசை கலைஞர்கள் சங்கர் மஹாதேவன், குருதாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் திரு. மஹாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது.
இது தொடர்பாக PVR Inox நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், “மஹாசிவராத்திரி விழா என்பது பாரத பாரம்பரியத்தில் ஈடு இணையற்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இத்தகைய சிறப்புமிக்க இவ்விழாவை ஈஷாவுடன் இணைந்து முதல்முறையாக வெள்ளி திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பக்தர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் PVR Inox திரையரங்குகளில் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்கான டிக்கெட்களை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய நிகழ்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் அருகே புதிய பாலம் கட்டுமான பணி; வணிக வரித்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்..
written by Abubakker Sithik
மதுரை அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான பழுதடைந்த பாலத்திற்கு 2.5 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வலசை கிராமத்திற்கு செல்லும் பழமையான சாத்தையார் ஓடை பாலம் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் போக்குவரத்திற்கு ஏதுவாக பாலத்தை இடித்து விரிவாக்கம் செய்ய வேண்டி இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக போராடி வந்தனர்.
மேலும் தற்போதைய சட்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வேட்பாளராக வலசை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது இந்த கிராம பகுதி மக்கள் அனைவரும் எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கு காரணம் தங்கள் கிராமத்திற்கு வரக்கூடிய பாதையில் சாத்தையார் ஓடையை கடக்க கூடிய பிரதான பாலம் மிகக் குறுகலாகவும் சிதிலமடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதால் இந்த பாலத்தை சீரமைத்து விரிவாக்கம் செய்து புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று 2 கோடியே 5 லட்சம் மதிப்பிலான புதிய பாலம் கட்டுவதற்கு தற்பொழுது அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இன்று இதற்கான பூஜையை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபருக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட ஹவாலா பணம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கீழக்கரையில் சோதனை !
by Baker BAker
written by Baker BAker
பெங்களூரு சிறையில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்னையில் இருந்து ஒரு லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதன் தொடர்பாக பெங்களூரு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று கீழக்கரை உள்ள இருவரது வீட்டில் சோதனை நடத்தினர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நசீர். இவர் சிறையில் இருந்த போது கைதிகளை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தார் என்ற வழக்கின் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ந்தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நசீரின் வங்கி கணக்கிற்கு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த ஹவாலா பணம் ஒரு லட்ச ரூபாயை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ந்தேதி ஏடிஎம் மெசினில் டெபாசிட் மூலமாக நசீர் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை மண்ணடியில் கீழக்கரையைச் சேர்ந்த தமீமுல் ஆசிக் மற்றும் அல் முபீத் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமீமூல் ஆசிக் சென்னையில் உள்ள நகை கடையில் வேலை செய்து வருகிறார். அல் முபீத் சென்னையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்த பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக அவர்கள் சொந்த ஊரான கீழக்கரை பருத்தி காரன் தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரு இடங்களிலும் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரி இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வீட்டில் எந்த முக்கிய ஆவணங்களும் கிடைக்காததால் ஒரு பென்டிரைவ் மற்றும் இருவரது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்றதாக அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் சென்ற பெண் மீது என் என்எல் பஸ் மோதியதில் படுகாயம் டிரைவர் கைது !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் நடந்து சென்ற பெண் மீது என். என்.எல் பஸ் மோதியதில் (ஜெயலெட்சுமி) படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி (47) இவர் கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு ரோட்டோரம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி வந்தஎன் என்எல் பஸ் ஜெயலெட்சுமி மீது மோதியதில் பின் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம்பட்ட ஜெயலெட்சுமியின் கணவர் கண்ணன் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்ன கன்னு உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியா வழக்குபதிவு செய்து என் என்எல் பஸ்ஸை பறிமுதல் செய்து டிரைவர் லாரன்சை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மார்ச் 08 ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா; குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு..
written by Abubakker Sithik
மார்ச் 08 ஈஷா மஹாசிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்; குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு..
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹா சிவராத்திரி விழா நம் பாரத கலாச்சாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர். ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு..
மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும், ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக பெண்கள் தினம் முன்னிட்டு மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பின் மூலமாக உணவு வழங்கி பேசுகையில், உலகில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் நினைத்தால் முதியோர்களை அரவணைத்து காப்பகங்களே தேவையில்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், பாலமுருகன், ரமேஷ்குமார் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் மத்திய பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி; மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது..
written by Abubakker Sithik
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில் மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது. ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது.
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் குழுமம் சார்பாக மத்திய தொழில் பாதுகாப்புத் துறை படை உருவான உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அலுவலர் கணேசன், விமான நிலைய துணை மேலாளர் ஜானகி ராம் மற்றும் ஏர் இந்தியா, இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட்., ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சுங்க இலாகா அணி, குடியேற்றத்துறை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டன.
மொத்தம் பத்து அணிகள் கொண்ட 23 லீக் போட்டிகள் நடைபெற்றது. காலிருதி அரையிறுதி, இறுதிப்போட்டி என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் ஏர் இந்தியா விமான அணியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணி மோதியதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் பரிசுகளை வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம்-2013 பற்றிய விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பணியிடத்தில் பாலியல் வன்முறை சட்டம் -2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் உள்ளக புகார் குழு அமைத்தல், புகார் பெட்டி வைத்தல் மற்றும் அதன் நோக்கங்கள் பற்றியும், அனைத்து பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு பலகை வைப்பது குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா விளக்கவுரை ஆற்றினார்.
மேலும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மகளிர் தினத்தினை முன்னிட்டு Selfie with Daughter போட்டியானது மாவட்ட ஆட்சித்தலைவரால் துவக்கி வைக்கப்பட்டது. 04.03.2024 முதல் 07.03.2024க்குள் மகள்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ https://forms.gle/ARrqerSxvtS7b3KSA என்ற இணைப்பில் தங்களுடைய முழு விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு 08.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பரிசுகள் வழங்குவார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளை சுற்றுலா அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..
written by Abubakker Sithik
மாற்றுத்திறன் படைத்த சிறப்பு பள்ளி குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளை திருநெல்வேலி அறிவியல் மையத்திற்கு சுற்றுலாவிற்கு அனுப்பி தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் குழந்தைகளை மகிழ்வித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவியல் மையத்திற்கு 04.03.2024 அன்று ஒருநாள் சுற்றுலாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனுப்பி வைத்தார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 714 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) நடராஜன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளின் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.