நமது கிழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்த மாநகராட்சி அதிகாரிகள். துரித நடவடிக்கை எடுக்க உதவிய நமது செய்தி தளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு. 3 தேதி அன்று நமது செய்தித் தளத்தில் மதுரை 77 வது வார்டு பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை இஎஸ்ஐ மருத்துவமனை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் என செய்தி நாம் வெளியிட்டிருந்தோம். இதன் செய்தி எதிரொலியாக 6/01/2020 இன்று மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீரையும் சேமிப்பு செய்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில் பல மாதங்களாக கிடப்பில் கிடந்த குடிநீர் குழாய் உடைப்பு பல அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தங்கள் செய்தித் தளத்தில் செய்தி வெளியான அடுத்த இரண்டு நாட்களிலேயே குடிநீர் குழாயை சரி செய்த உதவியை தங்களுக்கு நன்றி என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.