சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் கேணிக்கரை சிகில்ராஜ வீதி அருகே உள்ள விவேகானந்தர் ஸ்தூபியில் மலர்களால் அலங்கரித்த விவேகானந்தரின் உருவப் படத்திற்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். டாக்டர் மனோஜ்குமார் ஆசிரியர் (ஓய்வு), மணி, ஞான தீப சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் முருகேசன் முயற்சியால் மதுரையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க அரிய வாய்ப்பு. மதுரை மாநகருக்கு நாள்தோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மதுரை மாவட்டம் சார்பாக குறைந்த கட்டணத்தில் மதுரை எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் இருந்து காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மீண்டும் பிற்பகல் 2 மணியிலிருந்து 7 மணி வரையில் சுற்றுலா தளங்களை அறியும் வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் எல்லிஸ் நகர் பார்க்கிலிருந்து திருப்பரங்குன்றம் மாரியம்மன் தெப்பக்குளம் திருமலைநாயக்கர் மஹால் காந்தி மியூசியம் மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம் சென்றுவர மீண்டும் எல்லிஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங்கில் வேலைக்கு விடப்படும். இதற்கான கட்டணம் நபர் ஒன்றுக்கு 125 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும். இந்த பேருந்து மதுரையில் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணத்தில் மேலாண் இயக்குனர் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்; இதனை குழுவாக இணைந்து சென்றும் பயணிக்கலாம் தனிநபர் ஆகும் பயணிக்கலாம் எனவும் இதனால் மதுரையில் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பெரிய வாய்ப்பினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது என மேலாண் இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், பள்ளி கல்வி முடித்து உயர்கல்வி படிக்கும், காவலர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களுடைய குழந்தைகள் மொத்தம் 23 மாணவர்களுக்கு ரூபாய்.4,86,180/- சிறப்பு கல்வி ஊக்கத்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், வழங்கப்பட்டது.
மேலும் நன்றாக உயர்கல்வி படித்து கல்வி தரத்தையும், அறிவையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் மதுரை மாநகருக்கு பெருமை சேர்க்கும் படி கல்வியில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர காவல்துறைக்கு உதவும் நோக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் துவங்கப்பட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குற்றங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அண்ணாநகரில் உள்ள பாய்ஸ் கிளப் துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதால் அவற்றின் துவக்கவிழாவை மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துவக்கிவைத்தார்.
மேலும் குழந்தைகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறை எப்போதும் பாதுகாப்பாகவும் நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள் எனவும் மேலும் அவசர காலங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அவற்றின் பயன்பாடு மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் முன்னிட்டு இளைஞர் தின விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இளைஞர் விழாவில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி மாணவி சுகித்தாவிற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பாராட்டு.!
பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும், சென்று
தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் அசத்தி வரும் திருச்சியை சேர்ந்த மாணவி சுகித்தாவின் திறமைகளை அறிந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருச்சிக்கு வருகை புரிந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு . 10.01.2020 அன்று சிலம்பத்தில் பல்வேறு புதிய உலக சாதனைகள் மற்றும் கடந்த மாதம் சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற திருச்சி செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி சுகித்தாவை பாராட்டி வாழ்த்தினார்.
துணை ஜனாதிபதியை சந்தித்த சுகித்தா திருச்சி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார் அவர்கள் எழுதிய “பெரிதினும் பெரிது கேள்”என்ற புத்தகத்தையும் பரிசாக அளித்தார். இந்த புத்தகம் குறித்து கேட்டறிந்து யார் இவர், யாருடைய புத்தகம் என சுகித்தாவிடம் கேட்டறிந்து ஆசி வழங்கினார்கள்.
உடன் சுகித்தாவின் தந்தை இரா.மோகன் தாய் மோ.பிரகதா ஆகியோர் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீ அழ – உன்னை பார்த்து நான் அழ – நம்மள பார்த்து எல்லோரும் அழ. உசிலம்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் கவிதாவும் திமுக சார்பில் சந்திரகலாவும் போட்டியிட்டனர்.கவிதா செல்லம்பட்டி அதிமுக ஒன்றியச்செயலாளர் ராஜாவின் மனைவி ஆவார்.அதிமுகவிலிருந்து சிலரை திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு திமுகவுக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக வந்த தகவலால் காலை தேர்தல் ஆரம்பித்த காலை முதலே பரபரப்பு நிலவியது.மேலும் முடிவை அறிவிப்பதற்கு காலதாமதம் ஏற்ப்பட்டதால் அதிமுகவினர் நெஞ்சில் திகில் ஏற்ப்பட்டது.ஒருவழியாக 12.30 மணியளவில் அதிமுக கவுன்சிலர் கவிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட அதிமுகவினர் நிம்மதியடைந்தனர்.
தேர்தல் நடைபெற்ற அரங்கத்திற்கு அனைவரையும் கும்பிட்டபடி வந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜா தன் மனைவி (ஒன்றியத்தலைவர்) கவிதாவைப் பார்த்தவுடன் ஆனந்தத்தால் அழ ஆரம்பிக்க அவரைப் பார்த்த மனைவி கவிதாவும் அழ ஆரம்பிக்க இருவரையும் பார்த்த அங்கிருந்த பெண் கவுன்சிலர்களும் அழ ஆரம்பிக்க சிறிது நேரம் தேர்தல் அரங்கம் அழுகை அரங்கமாக மாறியது.இச்சம்பவம் அங்கு வந்திருந்த அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர்(52) . இவரது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று வடக்கன்பட்டு பகுதியை சேர்ந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகியோர் எஸ்தர் அவர்களின் மகளை கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனை எஸ்தர் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எஸ்தர் அவரின் வீட்டில் காம்பவுண்டில் நுழைந்து அவரது கணவரின் ஆட்டோவை உடைத்து , கெட்டவார்த்தை பேசி , கொலை மிரட்டல் விடுத்தார்கள். பின்னர் எஸ்தர் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரன் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமயத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.
by mohan
written by mohan
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் சென்னையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கதிர் கௌஷிக் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் அந்த மூன்று பேரில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மற்ற இருவர் உடல்களையும் மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர், ஆர்.வி.நகர், விவேகனந்தர் தெரு, சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ராமர் மகன் முத்துப்பாண்டி, 26 மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தில் C3 எஸ்.எஸ். காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.அருணாசலம் அவர்கள் முத்துப்பாண்டியை மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ணாநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த ராஜா தேசிங்கு 54 கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதுக்கோட்டை அருகே பொலிரோ வாகனம் புளிய மரத்தில் மோதிய விபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ்(எ)வெங்கடேசன்(31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி எம்ஜிஆர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்றுகொண்டிருந்த பவ்(எ) வெங்கடேஷசன் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் பவ்(எ) வெங்கடேசன் மற்றும் பொலிரோ காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38) உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதனையடுத்து அருகே இருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் செல்வம் உள்ளிட்ட இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவ்(எ)வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வம் என்பவரின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அமைச்சரின் தனி உதவியாளர் பவ் (எ) வெங்கடேசனின் தாயார் இந்திராஅம்மா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் இரண்டு நாள் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.
by mohan
written by mohan
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டியில் நேரு நினைவு கல்லூரில் மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரியத்தை அனைவருக்கும் பறைசாற்றும் வகையில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர்.நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையணிந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.புலி ஆட்டம் , மாடு ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
வெள்ளிக்கிழமை சுயநிதி பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற சிறப்புவிருத்தினர் அரியலூர் அரசு கலை கல்லுரி முனைவர் தமிழ்மாறன் பேசுகையில் உலகமே மூன்று நாடுகளை பார்த்து அஞ்சுவதாக கூறினார். இந்தியா , சீனா மற்றும் ஜப்பான் நாடுகளை பார்த்து உலகம் அஞ்சுவதாக ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை நினைவு கூர்ந்தார். உலகிலே தமிழகம் ஒழுக்கம் மற்றும் வீரத்தில் தலை சிறந்து விளக்குவதற்கு ஜல்லிக்கட்டு ஒரு சிறந்த உதாரணம் என்றும் பேசினார்.சனிக்கிழமை அரசு உதவி பெறும் பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரைப்பட நகைசுவை நடிகர் கிங்காங் மற்றும் பென்ஜமின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். கல்லூரியின் தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்தி : இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமரை சந்தித்து பேசினார்.!
by Askar
written by Askar
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமரை சந்தித்து பேசினார்.!
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா சென்றுள்ளார். கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய கலாச்சாரத் துறை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 4 காட்சிக் கூடங்களை புதுப்பித்து, புனரமைத்திருப்பதோடு, பழைய கலைக்கூடங்களை சீரமைத்திருப்பதுடன் புதிய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இன்றும் நாளையும் நடைபெறும் கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிக்கைக்கு சென்ற மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்தார். மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது இருவரது முதல் சந்திப்பு ஆகும்.
முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
இந்த சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நான் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன். இதனை ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளேன் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (10/1/2020) இராமநாதபுரத்தில் அமைந்துள்ள தியாகி தர்மக்கன் அமிர்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாம் மாணவர்கள் இயக்கத்தினரால் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையத்தில் தலைவர் கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கர்லின் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் நோக்கவுரையாற்றிய கலாம் மாணவர்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் விஜயேந்திர ராஜா பேசுகையில் சாதாரண மனிதர்களின் திறமையை உலகிற்கு அறிமுகம் செய்துவைக்கும் வில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு கலாம் இலட்சிய விருது வழங்குவதில் எங்கள் இயக்கம் பெருமையடைகிறது, இந்த இளம் வயதில் கலைவாணி தன் வாழ்நாட்களை உன்னதமான பணிகளுக்காக செலவுசெய்கிறார். ஒரு அமைப்பை நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இவர்போன்ற இளைஞர்களை உருவாக்குவதே கலாம் அவர்களின் இலட்சியம். இவரைப்போல பலர் எத்தனை தடைகள் வந்தாலும் மேற்கொண்ட பணியை நேசித்து செய்யவேண்டும் எனக்கூறினார்.
மேலும் Mind fresh Guidance & Counselling centre சார்பாக மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை கலைவாணி வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரி முதல்வர் கர்லின் நன்றி கூறினார். இப்பரிசளிப்பு நிகழ்வு பொங்கல் விழா கொண்டாட்டத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பி.எம்.டபிள்யூ சொகுசு கார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் மீது வேகமாக மோதியது இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருபவர் ரோஷன் குமார் 22 . மதியம் தனது வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இளைஞர் மீது மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்டுத்திய கார் நிற்காமல் வேகமாக சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்தி சென்று நெக்குந்தி சுங்கச்சாவடியில் நிறுத்தினர். காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் இச்சம்பவம் குறித்து அங்கு வந்த கிராமிய போலீஸார் இறந்துபோன ரோஷன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த கிரானைட் தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு கார் என்பது தெரியவந்துள்ளது.கார் ஓட்டி வந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். அதிவேகமாக வந்த கார் இளைஞர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சார்பில் காட்பாடி காந்தி நகர் தொன் போஸ்கோவில் தேசிய சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொறுப்பு சித்த மருத்துவ அலுவலர் ஞானமணி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது மூலிகை கண்காட்சியும் இடம் பெற்றது. சித்த மருத்துவ அலுவலர்கள் மல்லிகா, கோவிந்தன், விக்ரம்குமார், பழனி, வேல்விழி, தில்லைவாணன், சஞ்சய் காந்தி உள்ளிட்ட மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாவை விழா போட்டிகள் நடைபெற்றது .ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாய கல்லூரியின் தாளாளர் சேது குமணன் திருப்பாவை , திருவெம்பாவை பாடல்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார் .திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இளம் வயது மாணவர்கள் மனமாக ஒப்புவித்து பாராட்டுக்குரியது. 1 முதல் 8ம் வகுப்பு வரை திருப்பாவை ,திருவெம்பாவை போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. திருப்பாவையில் முதலிடம் பெற்ற சபரீஸ்வரன், கனிஷ்கா, முத்தையன் ,ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன் ,யோகேஸ்வரன், கீர்த்திகா ,ஆகியோருக்கும் ,திருவெம்பாவையில் முதலிடம் பெற்ற அட்சயா ,திவ்யஸ்ரீ, அம்மு ஸ்ரீ ,ஜனஸ்ரீ, சுரேகா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது
by mohan
written by mohan
மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். அவர்களுடைய அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்வதற்காக, தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் மதுரை மாநகர காவல்துறை வாட்ஸ்அப் முறையீட்டு எண் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி B2-மீனாட்சி அம்மன் கோவில் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சங்கீதா அவர்கள் சித்திரை வீதிகளில் உள்ள 6 முக்கிய இடங்களில் இன்று (10.01.2020) பொருத்தினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (11.1.2020) காலை 11.00 மணி முதல் 3:40 மணிவரை பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டம் கல்லூரி கலையரங்கக்கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த வகுப்பாசிரியருடன் பெற்றோர்கள் கலந்துரையாடல் செய்தனர். (Dietetics Day) உணவியல் தினத்தை முன்னிட்டு மனையியல் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் எடை மற்றும் உயரம் அளவிடப்பட்டு உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல்புல முதன்மையர்கள், தேர்வாணையர், பல்துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.