இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, திருச்சி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் 5 லட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வா். குறிப்பாக திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி பெறுவாா். ஆனால், அவா் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றாா். இதேபோல கூட்டத்தில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ எம். பழனியாண்டி உள்ளிட்ட பலரும் துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கட்சியினா் விரும்புவதாக மறைமுகமாகக் குறிப்பிட்டனா். இறுதியாக வேட்பாளா் துரை வைகோ பேசுகையிலும் கூட்டத்திலிருந்து சின்னம் என்ன எனக் கேட்டே குரல் கொடுத்தனா். இதனால் உணா்ச்சிவசப்பட்ட துரை வைகோ, கண்ணீா் சிந்தியபடியே ஆவேசமாக உரையாற்றி பேசிய போது ஏழு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் கரம் பற்றி எனது தந்தை உங்களுக்கு பின்னாலும் மு.க. ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றாா். இன்றுவரை அந்த வாக்குறுதியை கடைப்பிடித்து வருகிறாா். எங்களுக்கு பட்டம் வேண்டாம்; பதவி வேண்டாம்; தோதலில் போட்டியிட தொகுதியே வழங்காவிட்டாலும் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பணியாற்றுவோம். அரசியல்வாதி குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எனக்கு அரசியல் வேட்கையோ, ஆசையோ இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கட்சியினா் வலுக்கட்டாயமாக என்னை கட்சிப்பணிக்கு அழைத்து வந்துவிட்டனா். செத்தாலும் எங்களது சின்னம்தான். கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் சின்னத்தைப் பெற்று போட்டியிட முடியாது. நான் சுயமரியாதைக்காரன். அறிஞா் அண்ணா, தலைவா் கருணாநிதியிடம் அரசியல் கற்று வந்தவா் எனது தந்தை. எனவே திமுகவையும், உதயசூரியன் சின்னத்தையும் மிகவும் மதிக்கிறோம். ஆனால் எங்களது சின்னத்தை விடுத்து வேறொரு சின்னத்தில் நிற்க மாட்டோம். நடைபெறவுள்ள தோதல் பாசிசத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே, தா்மத்துக்கும், அதா்மத்துக்கும் இடையே, நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடைபெறும் யுத்தம். இதில் தா்மம், நீதி வெல்ல வேண்டும். அதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த உயிரைக் கொடுக்கவும் தயாா். நாற்பதும் நமதே. நமது கூட்டணியே வெற்றி பெறும் என்றாா் அவா். கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா். துறை வைகோவின் பேச்சாள் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் இருந்தனர்.
Category:
மாவட்ட செய்திகள்
பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி..
by Askar
written by Askar
பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார்.
‘நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை’ என இ.பி.எஸ் கூறியிருந்தார்.
இது குறித்து அன்புமணி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுக்காலமாக பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாங்கள் எங்கும் செல்லவில்லை. நாங்கள் இங்கே தான் இருக்கின்றோம். மற்றவர்கள் நம்மை குறை சொல்கிறார்கள்.
நாங்கள் வேடந்தாங்கல் பறவையல்ல. நாங்கள் வேடந்தாங்கல் சரணாலயம். யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்..
written by Abubakker Sithik
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்..
INDIA கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் APCV.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..
by Askar
written by Askar
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..
அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் 6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாயும், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளது. அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவருடைய பெயரிலும் வாகனம் இல்லை. 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன.
அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்து உள்ளது.
அவரது மனைவிக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் அசையும் சொத்தும், ரூ.22 கோடியே 60 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. ஆற்றல் அசோக்குமார் தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் ரூ.648 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..
written by Abubakker Sithik
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..
தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.கே.கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மேள தாளங்கள் முழங்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அதனை தொடர்ந்து தனது வேட்பு மனுவை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்த இந்தியா கூட்டணி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது..
by Askar
written by Askar
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது..
மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்று கதவு திறக்கவில்லை எனக் கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர்.
அது சமயம் அருகில் உள்ளவர்கள் பதறி அடித்து வந்துள்ளனர்.அதன் பிறகு பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கே சென்றபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் பெரியப்பாவானா ராணுவ வீரராக இருந்துவரும் செந்தில்குமார் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடியதும் தெரியவந்துள்ளது.
கடைசியாக காளான் பிரியாணி சாப்பிட்டார் அதன் காரணமாக புட்பாய்சன் ஆகி மயங்கியிருக்கலாம் என கூறியதோடு அருகில் உள்ளவர்களையும் கழிவறையில் சிறுமி மயங்கி கிடப்பதாக ஏமாற்றி இவர்களே கதவை உடைத்தும் நடித்தும் நாடகமாடி அருகில் உள்ளவர்களை நம்பவைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் 11 வயது வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் கொலை சம்பவத்தை மறைத்து உடைந்தயாக இருந்ததாக அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 வயது சிறுமி பாலியல் கொடூர கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியான வளர்ப்பு பெற்றோரை கைது செய்த கூடல்புதூர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி-3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -26
(கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த தேவாலயத்தின் அழகால் அதிசயித்து போனார்.
ஹேஜியா ஷோபியா
(Hagiya sofiya church)
என்ற அந்த தேவாலயம் உலக புகழ் பெற்றது.
ஹேஜியா ஷோபியா என்ற ஒரு விலைமாது உலகின் மிகச்சிறந்த அழகியாக இருந்தார்.
உலகின் பணக்காரர்களுக்கும்
மன்னர்களுக்கும்
தனது அழகை மிகப் பெரிய பொருள்களுக்கு விற்றார்.
காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் ரோம மன்னர்
ஹேஜியா ஷோபியாவின்
அழகில் மெய்மறந்து போனார்.
அவளை திருமணமும் செய்து கொண்டார்.
அவளுக்கு மனது உறுத்தியது. தனது பாவங்களை கரைக்க
ஒரு தேவாலயம் கட்ட முடிவு செய்தாள்.
மன்னரின் உதவியாலும்,
தனது கறைபடிந்த பொருளாதாரத்
தாலும்,
அற்புதமான ஒரு தேவாலயத்தை கட்டினாள்.
தேவாலயத்தில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன.
ஏசு பிரானின் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு மக்களை கவர்ந்தன.
மக்கள் பிற்காலத்தில்
ஹேஜியா ஷோபியாவையும்
வணங்கினார்கள்.
உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல்பாதில் தேவாலயத்தை சுற்றி பார்த்துவிட்டு அதன்
வரலாறுகளை அறிந்து கொண்டார்.
அந்த தேவாலயத்தின்
தலைமை குருவை அழைத்த மன்னர், இது மனிதர்களை வணங்க வேண்டிய இடமல்ல.
அண்ட சராசரங்களை படைத்து நம் எல்லோரையும் படைத்த இறைவனை வணங்கும் இடம் என்று போதித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை குரு தேவாலயத்தை
முறைப்படி மன்னரிடம் ஒப்படைத்தார்.
அந்த தேவாலயத்தை
எந்த வகையிலும் சிதைக்காமல் அந்த ஓவியங்களை திரைச்சீலைகளை வைத்து மறைக்க மன்னர் முகம்மது உத்தரவிட்டார்.
அங்கு நிர்வாகம் அமைக்கப்பட்டு முறைப்படி தொழுகைகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
இது போன்று அவர்களிடமிருந்து
அவர்களின் முழு சம்மதத்துடனேயே
பள்ளிவாசல்கள் உருவாயின.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் தோழர்
அபூ அய்யூப் அன்சாரி அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில் காண்ஸ்டாண்டி நோபிள் படை எடுப்பில் முகாமிட்டு தங்கியிருந்த போது மரணமடைந்தார்.
அவரின் ஆசைப்படி,
அங்கேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
உஸ்மானிய பேரரசர்
முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த அடக்கத்தலத்தை புதுப்பித்தார்.
அங்கு ஒரு அழகான மசூதியை கட்டினார்.
இந்த மசூதியில்தான்
முஹம்மது அல் பாதில் அவர்கள்
உஸ்மானிய பேரரசின் மன்னராக முடிசூடி பதவி ஏற்றார்.
சுல்தான்களுக்கு தனி
அடக்கத்தலம் உருவாக்கப்பட்டது.
அது சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது.
நிறைய கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.
அரசாங்கத்தின் நிதிஉதவிகள் , மானியங்கள், சலுகைகள் எல்லா மதத்தினர்களும்
சமமாக வழங்கப்பட்டன.
பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்கள் ரோமை கைப்பற்ற திட்டம் தீட்டினார்.
ரோமை நோக்கி நகர படைகளையும் தயார்
படுத்தினார்.
30 வருடங்கள் மிகச்சிறந்த ஆட்சி செய்த பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்கள்
மரணமடைந்தார்.
உஸ்மானிய சாம்ராஜ்யமே துக்கத்தில் துடித்து போனது.
காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் கிறிஸ்தவ சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டதால்
போப் கொதித்து எழுந்தார்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை ஆசிரியர் சையது ஆப்தீன் வாழ்த்து..
by Askar
written by Askar
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமாகியுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு வாழ்த்து கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவச் செல்வங்களே பதற்றமின்றி நம்பிக்கையோடு மன மகிழ்ச்சியுடனும் மன தைரியத்துடனும் தேர்வை எழுதுங்கள். வினாத்தாளைப் முழுமையாக படித்து தேர்வை எதிர்கொள்ளுங்கள்! உங்கள் மீதான முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
தேர்வு எழுதும் அணைத்து மாணவ மாணவிகளுக்கும் கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது..
திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அஜய்குமார், விஜய்ஆதிராஜ், மோகன்சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..
by Askar
written by Askar
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..
நேற்று இரவு (26/03/2024) நிலக்கோட்டை அருகே பறக்கும் படையைச் சேர்ந்த பிரவீன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வத்தலக்குண்டு -நிலக்கோட்டை வழியாக பெரிய குளத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பணத்தை வட்டாட்சியர் தனுஷ்கோடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..
written by Abubakker Sithik
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வளர்ப்பு தந்தையான ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது – அப்பாவி போல நாடகமாடிய கொடூர வளர்ப்பு தந்தை.
மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவறை சென்று விட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்தபோது பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உயிரிழந்த போது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான பெரியப்பாவான ராணுவ வீரராக இருந்து வரும் செந்தில்குமார் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது வளர்ப்பு மகள் கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும், பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டுவிட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடிவிட்டு பின்னர் அருகில் உள்ளவர்களை அழைத்து சிறுமி குளிக்கசென்று நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை என கூறி கதறி அழுது நடித்து அழைத்தபோது அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே இவர்களாகவே கதவை உடைத்துவிட்டு சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும், கடைசியாக காளான் பிரியாணி சாப்பிட்டார். அதன் காரணமாக புட்பாய்சன் ஆகி மயங்கியிருக்கலாம் என கூறியதோடு அருகில் உள்ளவர்களையும் கழிவறையில் சிறுமி மயங்கி கிடப்பதாக ஏமாற்றி இவர்களே கதவை உடைத்தும், நடித்தும் நாடகமாடி அருகில் உள்ளவர்களை நம்பவைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் 11 வயது வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் கொலை சம்பவத்தை மறைத்து உடைந்தயாக இருந்ததாக அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். வளர்ப்பு மகளான 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர பெரியப்பாவான செந்தில்குமார் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணிபுரிந்து சுபேதாராக இருந்து வருகிறார். சில நாட்களாக விடுமுறையில் வந்து இதுபோன்ற சொல்லொணா கொடூரத்தை அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. 11 வயது சிறுமி பாலியல் கொடூர கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியான வளர்ப்பு பெற்றோரை கைது செய்த கூடல்புதூர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை..
written by Abubakker Sithik
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில், 50 வயது மிக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – கொலையா? போலீஸ் விசாரணை..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது காரை திருமங்கலம் பஸ் டிப்போவின் வெளிப்பகுதியில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், காருக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், அருகில் இருந்தவர்கள் பார்த்த போது காருக்குள் உடல் அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் இருந்தது.
உடனடியாக, திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் அழுகிய நிலையில் இருந்த, 50 வயது மிக்க இறந்தவர் உடலை மீட்டு, இறந்தவர் யார்? என்பது குறித்தும், காருக்குள் எப்படி வந்தார் என்பது குறித்தும், கொலை செய்து காரில் போட்டுச் சென்றனரா? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதையே கருப்பொருளாக கொண்டுள்ளது; மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி
written by Abubakker Sithik
நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதே கருப்பொருளாக கொண்டுள்ளது என மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் பேட்டி
மதுரை நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நிகழ்வில் திமுக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாற்றாக சி.பி.எம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, திருவள்ளூர் சிலை சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், “இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 17 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஆட்சி மாற்றமே கருப்பொருளாக இருந்தது. 18-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதையே கருப்பொருளாக கொண்டுள்ளது. ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்ற இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். 3 ஆண்டுகளில் திமுக தலைமையிலான அரசு மதுரைக்கு செய்துள்ள திட்டங்கள், அமைச்சர்கள் உருவாக்கிய அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாங்கள் செய்ய சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜகவிடம் இருந்து பொது மக்களை காப்பாற்றுவது நமது கடமை; கனிமொழி கருணாநிதி பேச்சு..
written by Abubakker Sithik
பாஜகவிடம் இருந்து மதத்தையும், மக்களையும் காப்பாற்றுவது நமது கடமை; பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு..
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருச்செந்தூர் தேரடித்திடல் நேற்று பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, தெற்கு ரதவீதி, தோப்பூர், வீரபாண்டியன்பட்டினம், அம்பேத்கர் சிலை-பிரசாத் நகர், சண்முகபுரம், இராணிமகராஜபுரம்-ஆறுமுகநேரி பேரூராட்சி, அடைக்கலப்புரம், காமராஜபுரம், ஆறுமுகநேரி பஜார், செல்வராஜபுரம், திசைக்காவல் தெரு, மடத்துவிளை, கந்தன் குடியிருப்பு, அம்மன்புரம், சோனகன்விளை ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது, உங்களுடைய அன்பான வரவேற்புக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது தெருமுனை பிரச்சாரமா அல்லது ஒரு பொதுக்கூட்டமா என்று கேட்கத் தோன்றக் கூடிய அளவிலே இவ்வளவு பெரிய வரவேற்பைத் தந்து இருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மீண்டும் தூத்துக்குடி வேட்பாளராக நிற்க கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். சென்ற முறை நான் தேர்தலில் நின்ற போது பல பேர் ஏன் மீது வைத்த விமர்சனம், அவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். நிச்சியமாக தேர்தல் முடிந்து வெற்றி வாய்ப்பு கிடைத்தால் தூத்துக்குடிக்கு திரும்பி வரவே மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் தூத்துக்குடி என்பது என்னுடைய இரண்டாவது தாய்வீடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் என் மீது அன்பைப் பொழிந்து இருக்கிறீர்கள். அதே போல நானும் உங்களோடு நின்று பணியாற்றி இருக்கிறேன் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த உரிமையோடு நான் உங்களிடம் கேட்கிறேன், உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து மீண்டும் உங்களோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் என்பது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது வெறும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் இல்லை. நம்முடைய தேர்தல் என்பது இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். நம்முடைய முதலமைச்சர் சொல்வது போல், இது 2வது சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய அடையாளங்களை, நம்முடைய மொழியை, தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
ஒன்றிய பாஜக அரசு இந்த நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மாநில உரிமைகளையும் பறிக்கிறது. அப்படி உரிமைகளைப் பறிப்பதற்காக தமிழ்நாட்டு மக்களுடைய வரிப் பணத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், நம்மிடம் 1 ரூபாய் வாங்கி 26 பைசா தான் திருப்பி கொடுக்கிறார்கள். வெள்ள நிவாரணத்துக்கு இன்று வரை ஒரு ரூபாய் கூட கொடுக்க வில்லை. ஆனால், அவர்கள் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் 1 ரூபாய் வரி கொடுத்தால் 2 ரூபாய் 2 பைசா திரும்பிக் கொடுக்கிறார்கள். இது ஓரவஞ்சனை, நியாயம் இல்லாமல் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ளலாமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் இந்து மதத்தை காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர்கள் போல் இவர்கள் பேசுகிறார்கள். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், பாஜகவிடம் இருந்து இந்து மதத்தையும், மக்களையும் காப்பாற்றுவது நமது கடமை. ஏனென்றால் மதத்தைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, எந்த மக்களால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்களோ அவர்களை எதிர்த்து வேலை செய்து கொண்டியிருப்பதுதான் பாஜக, மோடி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடித்தட்டில் இருக்கக் கூடிய மக்கள், உழைக்கக் கூடிய மக்கள், வியாபாரிகள் யாரையாவது பாஜக வாழவைத்து இருக்கிறதா? என்றால் இல்லை. விவசாயிகளுக்கு எதிராகச் சட்டம், தொழிலாளர்களுக்கு எதிராகச் சட்டம், அது போல் ஜிஎஸ்டி கொண்டு வந்து இங்கே இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து, வியாபாரம் செய்ய முடியாத அளவுக்குச் சித்திரவதை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய முதலமைச்சர், எல்லோருக்குமான முதலமைச்சர், இன்னும் சொல்லப் போனால் எனக்கு ஓட்டுப் போட்டவர்கள், ஓட்டுப் போடாதவர்களுக்கு சேர்த்து நான் முதலமைச்சர். எனக்கு ஏன் ஓட்டுப் போடவில்லை என நினைக்க கூடிய அளவிற்கான பணியாற்ற வேண்டும் என்று சொன்ன முதலமைச்சர். அவருடைய ஆட்சியில் இன்றைக்கு எத்தனையோ புதிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்காக கொண்டுவரப்படுகிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரப்படுகிறது, பெண்கள் இங்கு இருக்கக்கூடிய சகோதரிகளுக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், விடியல் பயணம். அதேபோல் நம்ம வீட்டுப் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் ஆக இருக்கட்டும் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும், ஏன் என்றால் நம்ம பசங்க படிக்க வேண்டும். படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் நோக்கக் கூடிய விரும்பக்கூடிய ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேலை இல்லையே அப்படி என்று அமித்ஷா அவர்களைக் கேட்டால், போய் பக்கோடா போடு, அதுவும் வேலைதான் என்று சொல்லக்கூடிய மனது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், முதலமைச்சருக்கும் கிடையாது. எனது பிள்ளைகள் படிக்க வேண்டும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும், தொழிற்சாலைகளைக் கொண்டு வருவேன் அவர்கள் படித்துவிட்டு அங்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் தான் நாங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, இந்த நாடு தலைநிமிர எல்லா மக்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் இங்கே மட்டுமில்லை, டெல்லியிலும் ஆட்சி மாற்றம் வரவேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாடு நமது ஆகவேண்டும் நாற்பதும் நமது ஆக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட நாள் இந்த பகுதியில் கோரிக்கை என்பது பொன்னங்குறிச்சியில் இருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விரைவிலேயே அந்த திட்டம் தொடங்கப்படும் என்ற உறுதியை உங்களுக்கு நான் இந்த கூட்டத்தில் வழங்கிக் கொள்கிறேன் என்று பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளரும், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கரும்பர், சமத்துவ மக்கள் கழகத்தில் தலைவர் எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கழக அற்புதராஜ், மக்கள் நீதி மையம் கட்சியை சார்ந்த அலெக்ஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் தேர்தல் திருவிழா; மேலதாளம் முழங்க வாக்களிக்க அழைப்பு..
நெல்லையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியாக வாக்காளர்களை வாக்களிக்க பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு பதிவு செய்திட வரவேற்கும் வகையில் மேள தாளம் முழங்க பாரம்பரிய முறைப்படி என்.ஜி.ஓ காலனி விசுவாசம் (வயது 87) என்பவருக்கு மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிஷன்குமார், தேர்தல் அழைப்பிதழை வழங்கி, தவறாமல் வாக்களிக்க வருமாறு கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து முதற்கட்டமாக மூத்த குடிமக்கள் (85 வயதிற்கு மேற்பட்டவர்கள்) இல்லத்திற்கு நேரில் சென்று, தேர்தலில் வாக்காளிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி, அழைப்பு விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயின், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலெட்சுமி, இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகாம சுந்தரி ஆகியோர் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று பாரம்பரிய முறைப்படி மேள தாளம் முழங்க தேர்தல் அழைப்பிதழை வழங்கி, தேர்தல் திருவிழாவில் பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், தேர்தல் திருவிழா என்ற அடிப்படையில் ஏப்ரல் 13-அன்று மிதிவண்டி பேரணி, மேடை காவல் நிலையம் மற்றும் வ.உ.சி மைதானம் அருகில் நடைபெற உள்ளது. பாராம்பரிய விளையாட்டுகள், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு முறையில் இளம் வாக்காளர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேர்தல் உன்னதத்தை கொண்டு செல்லும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறலுக்கு cVIGIL App மூலம் புகார் தெரிவிக்கலாம். உங்களது புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களை 1950/1800 425 8373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற தேர்தலின் போது குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வாக்குச் சாவடிகளை தேர்வு செய்து அப்பகுதிகளிலுள்ள தெருக்கள், வீடுகளில் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணிகள் வாக்காளர் கல்வியறிவு இயக்கத்தினை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் குறைந்த வாக்குப்பதிவு பகுதிகளிலும், பிற இடங்களிலும் இளம் வாக்காளர்கள், பொதுமக்கள், அனைவரிடமும் வீடு வீடாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தேர்தல் வாக்குப்பதிவு நாள் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது என்பதை நினைவூட்டும் வகையில் அவ்வீடுகளில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டி வருகிறார்கள். இந்நிகழ்வில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன், துணை வட்டாட்சியர் பாலசந்தர், ஓய்வூதிய சங்கத்தினர் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், நல்லபெருமாள், சீதாராமன், சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம், மாற்றுத் திறனாளிக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் 100% வாக்களிப்பதற்காக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் T.அபிதா பெல்சியா (காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுரண்டை), A.சன்மதி (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலங்குளம்), M.பேச்சியம்மாள் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களாக (SVEEP AMBASSADOR) நியமித்து அவர்களுக்கு 25.03.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரால் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களுக்கான ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து 31 கல்லூரிகளுக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியியல் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி கலந்து கொண்டார். மேலும் உதவி திட்ட அலுவலர் அ.பிரபாகர் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்! ஓர் முழு பார்வை..
கன்னியாகுமரி
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்
திருநெல்வேலி
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா
தென்காசி
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்
தூத்துக்குடி
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்
இராமநாதபுரம்
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்
விருதுநகர்
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்
தேனி
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்
மதுரை
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி
சிவகங்கை
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி
தஞ்சாவூர்
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்
நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா
மயிலாடுதுறை
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்
சிதம்பரம்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி
கடலூர்
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்
பெரம்பலூர்
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி
திருச்சிராப்பள்ளி
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்
கரூர்
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா
திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்
பொள்ளாச்சி
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்
கோயம்புத்தூர்
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்
நீலகிரி
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்
திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி
ஈரோடு
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்
நாமக்கல்
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி
சேலம்
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்
கள்ளக்குறிச்சி
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்
விழுப்புரம்
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்
ஆரணி
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
திருவண்ணாமலை
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு
தருமபுரி
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா
கிருஷ்ணகிரி
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்
வேலூர்
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்
அரக்கோணம்
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
காஞ்சிபுரம்
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
ஸ்ரீபெரும்புதூர்
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்
மத்திய சென்னை
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்
தென் சென்னை
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி
வட சென்னை
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி
திருவள்ளூர்
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்
புதுச்சேரி
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது..
by Askar
written by Askar
நடப்பு ஐ.பி.எல். தொடரின் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 8 ரன்களில் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்த நிலையில் மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ஷிகர் தவானும் 45 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா – சாம் கர்ரண் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதில் சாம் கர்ரண் 23 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் சஷாங் சிங் அதிரடியாக விளையாடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி- டு பிளஸ்சிஸ் களமிறங்கினர்.
டு பிளஸ்சிஸ், கிரீன் ஆகியோர் தலா 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். படிதார் 18 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் (3 ரன்களில் அவுட்) தாக்குப்பிடிக்கவில்லை.
ஒருபுறம் கோலி மட்டும் அணியின் வெற்றிக்காக தனி ஆளாக நின்று அதிரடியுடன் விளையாடினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 77 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
எனினும், ஆட்டத்தின் கடைசிகட்டத்தில் தினேஷ் கார்த்திகும், இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய லோம்ரோரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர் . இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் பெங்களூரு அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. தினேஷ் கார்த்திக் 27 ரன்களும், லோம்ரோர் 17 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். பஞ்சாப் தரப்பில் ரபாடா, ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடிநீரை வீணாக்கியதால் அபராதம்.. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்..!
by Askar
written by Askar
குடிநீரை வீணாக்கியதால் அபராதம்.. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்..!
கர்நாடகாவை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பெங்களூர் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடிநீரை வீணாக்கியதற்காக 22 குடும்பங்களுக்கு பெங்களூரு குடிநீர் வாரியம் அபராதம் விதித்துள்ளது. காரை கழுவுவதற்கும் தோட்டத்தை பராமரிப்பதற்கும் சிலர் குடிநீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால், குடிநீரை வீணாக்கியதாகக் கூறி குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீரை சேமிக்கும்படி பெங்களூரு குடிநீர் வாரியம் உத்தரவிட்டது. வாகனங்களை கழுவவும், கட்டுமான பணிகளுக்கும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
“22 வீடுகளில் இருந்து 1.1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக அபராதம் (ரூ. 80,000) வசூலிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
விதிகளை மீண்டும், மீண்டும் மீறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும் போது கூடுதலாக 500 ரூபாய் அபராதம் விதிக்க பெங்களூரு குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. ஹோலி கொண்டாட்டங்களின்போது, காவிரி மற்றும் போர்வெல் தண்ணீரை நடனங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒருமுறை பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியும் பாத்திரங்களில் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், “பெங்களூருவுக்கு நாளொன்றுக்கு 2,600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையால் பெங்களூரு தள்ளாடுகிறது.
பெங்களூருவின் மொத்தத் தேவையில் 1,470 மில்லியன் லிட்டர் தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்தும், 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் பெறப்படுகிறது என்றார்.
You must be logged in to post a comment.