Home செய்திகள் மேல் பெண்ணாத்தூர் எம்.வி.சி பாய்ஸ் கிளப் சார்பில் முதலாமாண்டு கைப்பந்து விளையாட்டு போட்டி.

மேல் பெண்ணாத்தூர் எம்.வி.சி பாய்ஸ் கிளப் சார்பில் முதலாமாண்டு கைப்பந்து விளையாட்டு போட்டி.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எம் பி சி பாய்ஸ் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு கைப்பந்து விளையாட்டு போட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து பேசினார் அவர் பேசுகையில் ஒற்றுமையோடு விளையாடி நாம் சார்ந்த பகுதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டி நடத்தி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசினார் ஊராட்சி செயலாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்று பேசினார் ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் திமுக பிரமுகர் ஆர்கே செல்வம் ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் முன்னிலை வகித்தனர்சிறப்பாக நடைபெற்ற கைப்பந்து விளையாட்டு போட்டியில் திருவண்ணாமலை, சாத்தனூர், கொட்டகுளம் , ஆதமங்கலம் புதூர், வளையாம்பட்டு, சே.கூடலூர், வானாபுரம், ஆற்காடு, வேலூர், சென்னை, பாண்டிச்சேரி, ஆகிய நகரங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற விளையாடினர் இவற்றில் சிறப்பாக விளையாடி முதல் பரிசு வேலூர் அணியினர் தட்டி சென்றனர். முதல் பரிசு வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் கே செல்வம்10001/- பரிசு வழங்கினார் இரண்டாம் பரிசு வெற்றி பெற்ற மேல்பெண்ணாத்தூர் அணியினருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் விஜய் பரிசு 8001/- வழங்கினார் மூன்றாம் பரிசு வெற்றி பெற்ற வாணாபுரம் அணியினருக்கு ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் 6001/- வழங்கி பாராட்டினார். மாநில கைப்பந்து பயிற்சியாளர் நாகராஜ் நடுவர் பணியில் சிறப்பாக செய்திருந்தார் மேல்பெண்ணாத்தூர் எம்.வி.சி பாய்ஸ் கிளப் அணியினர் மணி, தொல்காப்பியன், சரவணன், மற்றும் அணி வீரர்கள் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டனர்.கிராம மக்களின் ஆதரவோடு கைப்பந்து விளையாட்டுப் போட்டி முதலாம் ஆண்டு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!