சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் முதுகுவலி கை வலி என நாடகமாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ்.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், பாலமுருகன் ஆய்வாளர் ஸ்ரீதர் , உள்ளிட்ட 10போலிஸ் கைதிகளையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களை மதுரை சிபிஐ அலுவலகம் மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு பின்பு சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவுபடி வரும் 30ஆம் தேதி வரை இவர்களை மதுரை மத்திய சிறையில் அடைக்கஅடைக்கப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி ஆய்வாளர் ஸ்ரீதர் முதுகுவலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு உடல்நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கூறிய நிலையில் இடதுகை வலிப்பதாகவும் கூறியதை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.