8
மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் திட்டங்கள் அனைத்துக்கும், பொது மக்கள் இ. சேவை மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும், என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.இந்திரா காந்தி முதியோர் உதவித் திட்டம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் திட்டம், முதிர்கன்னி உதவித் திட்டம் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சார்பில் அளிக்கப்படும் திட்டங்களுக்கு விண்ணபிப்போர், இனி வருகின்ற காலங்களில் இ. சேவை மூலம் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும், தவிர நேரடியாக மனுக்களை அளிக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.