இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம் ஆகியவற்றிற்கு கிருமி நாசினி தெளிப்பு மின்சார தானியங்கி இயந்திரம் வழங்கப்பட்டது.
உச்சிப்புளி காவல் ஆய்வாளர் முத்து பிரேம் சந்த், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சுரேந்திரன் ஆகியோரிடம் ரோட்டரி மண்டலம் 1துணை ஆளுனர் இன்ஜினியர் கே.காந்தி வழங்கினார்.உச்சிப்புளி ரோட்டரி சங்க தலைவர் எம்.ராஜேஸ்வரன், உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் வி.என். நாகேஸ்வரன் (மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன்), உச்சிப்புளி ரோட்டரி சங்க செயலர் வெள்ளைச்சாமி, முன்னாள் தலைவர்கள் காமில் ஹுசைன், டாக்டர் ஜெயபால், வழக்கறிஞர் செந்தில் குமார், அபுதாஹிர், முன்னாள் செயலர்கள் பாலகிருஷ்ணன், டாக்டர் தாமரைச்செல்வன் மற்றும் சிவகுமார், கல்யாணராமன், மக்தூன், டாக்டர். சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.