மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் பந்தல் மற்றும் கொட்டகை கட்டும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை அதிமுக எம்எல்ஏ பி வி.பாரதி வழங்கினார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே வருவதற்கு அரசு அனுமதித்துள்ள இந்நிலையில் கொரோனா தடையால் கிராமத்தில் உள்ள ஏழைமக்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர் வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பந்தல் மற்றும் கொட்டகை கட்டும் தொழிலாளர் 50 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய நிவாரண தொகுப்புகளை சீர்காழி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் பி வி.பாரதி வழங்கினார்.நிகழ்ச்சியில், அ தி மு க பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் பார்த்தசாரதி உடனிருந்தனர், அரசு அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றி தண்டல் மற்றும் கொட்டகை போடும் அனைவரும் நிவாரணங்களை வாங்கி சென்றனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்
You must be logged in to post a comment.