ஊரடங்கிலிருந்து தளர்வு வழங்கி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் செயல் பட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 42 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உட்பட தமிழகம் முழுவதும்1800 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன பயிற்சி பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் இன்று வரை ஊரடங்கு காரணமாக செயல்படவில்லை.
இதனால் இந்த பயிற்சி பள்ளியை நம்பி வாழ்ந்து வரும் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து சிரமம் அடைந்து வருவதாகவும், தமிழக அரசு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட இதுவரை எந்த தளர்வும் அளிக்கவில்லை தமிழக அரசு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இயக்க தளர்வு அளிக்க வேண்டும் அளிக்கும் பட்சத்தில் தங்கள் பயிற்சி பள்ளிகள் அரசின் உத்தரவுக்கு ஏற்ப சமூக இடைவெளி முகக்கவசம் அணிந்து முறையாக செயல்படும் என உறுதி அளிப்பதாகவும், 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மூடிக்கிடக்கும் 1800 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் இயங்க தமிழக அரசும் முறையான தளர்வு அளிக்க வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.