மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை சாலையிலுள்ள அடுத்த வண்ணான் பாறைப்பட்டி தனியார் ஒருவரின் தோட்டத்தில் கிணறில் முதலை ஒன்று கிடப்பதாக காலை 10 மணி அளவில் மேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தது.
பின்பு தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் கிணற்றுக்குள் இருந்த முதலையை உயிருடன் பிடித்து வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மதுரையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த முதலையை எங்கே விடுவது என நாளை காலை தான் தெரிய வரும் என வன அலுவலர் ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்தார்.மேலும் இந்த முதலை எங்கிருந்து வந்தது என தெரியவில்லை எனவும் தகவல் தெரிவித்தார்.
அப்பகுதி மக்கள் முதலையை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் எங்கிருந்து வந்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை என்றும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
எனினும் உயிரை பணயம் வைத்து வனத்துறையினர் தீயணைப்பு துறையினரும் முதலையை மீட்டது அப்பகுதி மக்களிடையே நிம்மதி ஏற்படுத்தியது.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.