Home செய்திகள் செயல்படாத அரசு மருத்துவமனை,கொரானா வார்டாக மாற்ற பணிகள்; பிடிப்பட்டது ஐந்து பாம்புகள்..!

செயல்படாத அரசு மருத்துவமனை,கொரானா வார்டாக மாற்ற பணிகள்; பிடிப்பட்டது ஐந்து பாம்புகள்..!

by Askar

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட பின்னர் பழைய மருத்துவமனையில் இயங்கி வந்த பல்வேறு பிரிவுகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

சித்த மற்றும் ஹோமியோ மருத்துவப் பிரிவு மட்டும் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், அதுவும் கடந்த வாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்கள் நிறைந்து காணப்பட்ட அப்பகுதியில் தற்போது கொரானா தனிப்பிரிவாக செயல்பட பணிகள் நடைபெற்று வருகிறது.

அங்கு பாம்பு நடமாட்டம் கண்டதை அடுத்து நாட்டரசன் கோட்டையில் இருந்து பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் மகுடி ஊதி சாரை நாகப்பாம்பு உள்ளிட்ட ஐந்து பாம்புகளை லாவகமாக பிடித்தனர். இதனை அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.

விரைவில் கொரானா தனிப்பிரிவு வார்டுகளாக செயல்பட உள்ள நிலையில் பாம்புகள் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!