Home செய்திகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்:தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் WJUT யின் மாநிலத் தலைவர் சகாயராஜ் கோரிக்கை!

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்:தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் WJUT யின் மாநிலத் தலைவர் சகாயராஜ் கோரிக்கை!

by Askar

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் WJUT யின் மாநிலத் தலைவர் ஒரு கோரிக்கை!

“தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ. சகாயராஜ் தமிழக முதல்வரிடம் கீழ்க்கண்ட ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா நோய்த்தொற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக வருகிறது.

அதேபோன்று நோய்த்தொற்று ஏற்பட்டு மரணமடையும் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

கொரானா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சென்னை பகுதி முழுவதும் சிறப்பான முறையில் அனைவருக்கும் கொரானா பரிசோதனைகளை அரசே முன் வந்து இலவசமாக செய்திட வேண்டும்.

மேலும் எந்தெந்த மாவட்டங்களில் கொரானா தொற்று அதிகமாக உள்ளதோ அந்த மாவட்டங்களில் உடனடியாக கடுமையான ஊரடங்கை சில நாட்களுக்கு நீட்டித்தும், அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அரசு செய்து கொடுத்தும், நடவடிக்கை எடுத்திட தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவன்;

ஜெ. அஸ்கர்

மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்.

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!