புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயம் வாசலில் மூதாட்டி உட்பட முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த வழியாக நகராட்சி ஆய்வு மாளிகை திறப்பு விழாவுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், தேவாலயம் வாசலில் முதியவர்கள் அடுத்தடுத்து உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, உடனே காரில் இருந்து இறங்கி தேவாலயத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களிடம் விசாரித்தார்.
ஒவ்வொருவரும் தங்களது நிலை பற்றி எடுத்துக்கூறவே, அவர்களின் கதையைக் கேட்டுக் கவலையடைந்த ஆட்சியர், முதியவர்கள் அனைவருக்கும் உடனே முதியோர் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர், “சில தினங்களிலேயே உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து இனி யாசகம் பெற வேண்டாம்” என்று அன்புக் கட்டளை விதித்தார்.
அதோடு, அருகே இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இவர்களுக்கு உடனே உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
You must be logged in to post a comment.