9
தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் தரக்குறைவான பேச்சைக் கண்டிக்காத தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கண்டித்து அதிமுக., சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜூன் 1 காலை 10:30 மணி முதல் 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், மக்கள் அதிகம் கூடுமிடங்கள் என 4 அல்லது 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமன மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
You must be logged in to post a comment.