இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் தலைவரும், ஆட்சியருமான கொ.வீரராகவ ராவ், முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் ஆலோசனைபடி ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கமுதி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், குளிர்பானம், சோப் மற்றும் கவச பாதுகாப்பு உடை ஆகியன ரெட் கிராஸ் சொசைட்டி வழங்கியது.
உணவுக்கு வழியின்றி தவித்த வட மாநிலத்தவர் 12 பேருக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம் கமுதி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், குளிர்பானங்கள், சோப் மற்றும் கவச பாதுகாப்பு உடை ஆகியன வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் மாற்று திறன் கணவர், மன வளர்ச்சி குறைந்த மகனுடன் வாழ்வாதாரம் பாதித்த பெண்ணுக்கு குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, ஆர்.எஸ் மங்கலம், சத்திரக்குடி நகர்களில் 26 இடங்களில் குளிர் பானம், பிஸ்கட், குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தொய்வின்றி தொடர்கிறது.
மாவட்ட செயலர் எம். ராக்லாண்ட் மதுரம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் வி. மெய்மொழி (ஆர்.எஸ்.மங்கலம்),இரா. இளவரசி (கமுதி), எஸ்.மாலதி (முதுகுளத்தூர்), ஜூனியர் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட கன்வீனர் எம். ரமேஷ், மண்டபம் கல்வி மாவட்ட கன்வீனர் எம். பாலமுருகன், ரெட் கிராஸ் முதுகுளத்தூர் அமைப்பாளர் எஸ். துரைப்பாண்டியன், ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் ஜி. பரமேஸ்வரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.