6
மதுரை திருநகர் காவல் துறை மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து தற்காலிக காய்கறி வணிக வளாகத்தை திருநகர் முதலாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளி மைதானத்தில் நாளை முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை விற்பனை செய்வதற்கான பணியானது தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த மைதானத்தில் சுமார் ஒவ்வொரு கடையும் ஒரு மீட்டர் இடைவெளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளார்கள். ஒவ்வொரு கடைக்கும் சுமார் 2 அடி 10 வட்டங்கள் போடப்பட்டு வாடிக்கையாளர்கள் இது நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மாவட்டம்
You must be logged in to post a comment.