மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து மற்றும் தற்காப்பு குறித்த பயிற்சிகள் நடைபெற்றது..!
வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் . மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தென் மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மாவட்ட அலுவலர் கல்யாணகுமார் மற்றும் செஞ்சிலுவை சங்கம் கால்நடை பராமரிப்புத்துறை கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து தீயணைப்பு மற்றும் தற்காப்பு வசதிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.இதில் பள்ளி, கல்லூரிகளி விருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை கால்நடை துறை , நகராட்சிகள் துறை , சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் கவரும் இருந்தது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.