ஓம் மாடர்ன் தம்புரான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் விஜயலட்சுமி தமிழில் “பவுர்ணமி நாளில் ” என்ற தமிழ் திரைப்படத்திற்கான துவக்கவிழா திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே உள்ள நந்திஷ் கார்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்திய திரைப்பட துறையின் பழம்பெரும் இயக்குனர் கே .எஸ் . கோபாலகிருஷ்ணன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து வாழ்த்தினார்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் விஜயவாசன் வரவேற்று பேசினார்.இவ்விழாவில் நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், நிலவைரவி, வாடிப்பட்டி மூர்த்தி, கிரேன் மனோகர், நிழல்கள் ரவி, இசையமைப்பாளர் ஆதிஷ், நடன இயக்குனர் முகேஷ் , சிறப்பு ஒளிப்பதிவாளர் குமரன்ஜி , மேக்கப் தொழில்நுட்ப வல்லுனர் ஹ க்கீம் , துணை நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இத்திரைப்படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜா சிபில் முடிவில் நன்றி கூறினார்.இந்தப்படத்தின் கதை கிராமப்புறங்களில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா
You must be logged in to post a comment.