மதுரை ரயில் நிலையத்தில் பல்வேறு கட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது அதில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பணியானது ரயில்வே சுற்றுச்சுவரில் அழகிய வண்ணத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஓவியர்கள் கொண்டு மதுரையை போற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த சுற்றுச் சுவற்றில் முழுவதும் ஓவியங்கள் அழிந்து நோட்டீஸ் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கட்சிப் பாகுபாடின்றி நோட்டீஸ் ஓட்டும் நபர்கள் மீது ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் அதே இடத்தில் மதுரையைப் போற்றுவோம் மற்றும் தமிழ் இலக்கியங்களை காக்கும் ஓவியங்களை தீட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்களின் எதிர்பார்ப்பு
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.