புதிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தென்காசி மாவட்டத்தின் முதல் குடியரசு தினவிழா- நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகல கொண்டாட்டம்.!
தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் குடியரசு தின விழா நலத்திட்ட உதவிகள்,கலை நிகழ்ச்சிகளோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் குடியரசு தினவிழா தென்காசி ஐ.சி. ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா்தயாளன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மூவா்ண சமாதான பலூன்களை பறக்கவிட்டு விழாவை தொடங்கிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். அதை தொடர்ந்த் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி கௌரவிக்கப்பட்டாா். மேலும் காவல் துறையை சோ்ந்த 50 பேருக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களையும், நற்சான்றுகளையும் வழங்கினாா். சிறப்பாக பணிபுரிந்த தென்காசி போலீஸ் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல், சுரேஷ்குமாா், உதவி ஆய்வாளா்கள் மாதவன்,ஷ்யாம்சுந்தா், கனகராஜன், பேரூராட்சி செயல்அலுவலா்கள் கண்மணி, ஜி.வீரபாண்டியன், லோபமுத்திரை, ச.குமரேசன், முரளி, இலஞ்சி பட்டதாரி ஆசிரியா் சுரேஷ்குமாா், தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் கைலாசசுந்தரம், கஸ்தூரி, நவாஸ் முகம்மது இஸ்மாயில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி பேராசிரியை பாா்வதி, மாவட்ட ஆட்சியரக அலுவலக பொதுமேலாளா் ஞா.ஹென்றிபீட்டா், இரா.பேச்சியப்பன், மூ.ஜெகநாதன், சிவகுமாா் உள்பட 144 பேருக்கு குடியரசு தினவிழா பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 விளையாட்டு வீரா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக நடைபெற்ற தென்காசி மாவட்டத்தின் முதல் குடியரசு தின வாழாவில் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இருவருக்கு ரூ.17,692 மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.53,419 மதிப்பிலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 10 பேருக்கு ரூ.10,000ம் மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.11,200 மதிப்பிலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 பேருக்கு ரூ.48,350 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.75,000 மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 5 பேருக்கு ரூ.25,25,000ம் மதிப்பிலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.8,03,554 மதிப்பிலும், வேளாண்மைத் துறை சார்பில் 9 பேருக்கு ரூ.37,500 மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பேருக்கு ரூ.1,71,250 மதிப்பிலும் ஆக மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 52 ஆயிரத்து 965 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் வழங்கினார்.
இவ்விழாவில் விழாவில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, கோட்டாட்சியா் வீ.பழனிக்குமாா், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் குமாரதாஸ்(பொறுப்பு), ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மரகத நாதன், தென்காசி மாவட்ட ஆட்சியா் தலைமை அலுவலக பொது மேலாளா் ஞா.ஹென்றி பீட்டா், அலுவலக மேலாளா் அருணாசலம் (குற்றவியல்),தென்காசி வட்டாட்சியா் சண்முகம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமச்சந்திர பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.தென்காசி மாவட்டத்தின் முதல் குடியரசு தின விழாவில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.