7
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இராஜசிங்கமங்கலம் பூவாணிப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் பாதுகாப்பு வேலியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாதுஷா, ஆனந்த்ராஜ் மற்றும் இராஜசிங்கமங்கலம் இளைஞர்கள் ராவுத்தர் , முகம்மது, அசார் , ஜுனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.