5
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு எல்லிஸ் நகர் 70 அடி சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே சுமார் 20 அடி நீளத்திற்கும் சுமார் முக்கால் அடி பள்ளத்தில் தனியார் இன்டர்நெட் கேபிள் தோண்டப்பட்ட குழியால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் பலர் விழுந்து படுகாயம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நமது இணையதளத்தில் இதுகுறித்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தால் அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இரவோடு இரவாக பள்ளத்தை சரி செய்து பொதுமக்களின் உயிரை காத்துள்ளனர் .இச்செய்தியை வெளியிட்டு பள்ளத்தை சரி செய்ய உதவிய கீழை நியூஸ் சத்தியபாதை மாத இதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.