வேலூர் அடுத்த காட்பாடியில் புதியதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினார். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போக்குவரத்தை அதிரடியாக நேற்று மாற்றினார்.இன்று 15-ம் தேதி மாலை சாலையின் நடுவே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க நெடுஞ்சாலை துறையின் உதவியோடு Stop | Iines, Centre Media n lines மற்றும் இடது , வலது பக்கம் திரும்புதல் போன்றவற்றை பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் வெள்ளை நிறத்தில் கோடுகள் சித்தூர் பஸ் நிலையம், ரயில் நிலையம், குடியாத்தம் சாலை, வள்ளிமலை ரோடு ஆகிய இடத்தில் கோடுகள் போடப் Uட்டன. போக்குவரத்து ஆய்வாளர் பாலாஜி’ உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன், ராஜமோகன் ஆகியோர் உடன் இருந்து ஆய்வு செய்தனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.