வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கென்னடி இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவரது மகன் கோகுல்காட்பாடி அடுத்த வடுகந் தாங்கலில் உள்ள NTTF தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகின்றார். கோகுலுடன் படிக்கும் 4 மாணவர்கள் ஒன்று சேர்ந்து கோகுலை கடத்தி ரூ 3 கோடி கேட்டு போனில் மிரட்டினர். இதுகுறித்து தகவல் பெற்ற எஸ், பி.பர்வேஷ் குமார் 3 தனிப்படை அமைத்து தேடினார்.காட்பாடி வள்ளிமலை சாலையில் ரூ 5 லட்சம் கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர்.தகவல் பெற்றதனிப்படையினர் டம்மி வெள்ளை பேப்பர் வைத்து கடத்தல் நபர்களிடம் கொடுக்க சொல்லி சுற்றி வளைத்து கைது செய்து கோகுலை மீட்டனர்.கடத்தலில் ஈடுப்பட்ட சக மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர்.தகவல் பெற்று சில மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக செயல்பட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது கடத்தல் நாடகமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.