Home செய்திகள் இராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை..

இராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை..

by mohan

தலைநகர் டில்லியில் சமீபத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக கீழக்கரை, வாலிநோக்கம் பகுதிகளில் தலா ஒருவர், ராமநாதபுரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள், நான்கு பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என இன்று (20/07/2019( காலை விசாரித்தனர்.

மேலும், உள்துறை அமைச்சகம் தடை செய்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தோர் ஊடுருவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரின் பின்புலம், பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. தலா 5 பேர் வீதம் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை நிறைவு செய்தனர். இந்த நால்வரது பெயரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தேசவிரோத வழக்குகள் பதிவாகி உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!